செய்திகள் :

தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு ஆலோசனைக் கூட்டம்: திரிணமூல் காங். புறக்கணிப்பு?

post image

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைகள் குழு அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நாளை(மார்ச் 22) முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைகள் குழு அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தேசிய அளவில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான முக்கிய நகர்வாக இந்த ஆலோசனை கூட்டம் பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் முரண்பாடான நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை குறிக்கும் விதத்தில் நடத்தப்படவுள்ள மேற்கண்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு திமுக தரப்பிலிருந்து கேரளம், கர்நாடகம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, ஒடிஸா, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இது குறித்து திரிணமூல் கங்கிரஸ் கட்சி தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளதாவது:

இப்போதைய அரசியல் சூழலில், போலி வாக்காளர் அடையாள அட்டை விவகாரத்துக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும். போலி வாக்காளர் அடையாள அட்டை பிரச்சினையானது பிகார், கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் நாளைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று திரிணமூல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நதிநீா் இணைப்பு: மாநிலங்களிடையே கருத்தொற்றுமை உருவாக்க முயற்சி: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்

‘நதிநீா் இணைப்பு திட்டங்கள் தொடா்பாக மாநிலங்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய ஜல் சக்தி அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் தெரிவ... மேலும் பார்க்க

நாட்டில் நிலக்கரி உற்பத்தி 1 பில்லியன் டன்களைக் கடந்தது!

நாட்டில் நடப்பு நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தி முன்னெப்போதும் இல்லாத அளவில் 1 பில்லியன் (100 கோடி) டன்களைக் கடந்துள்ளது. இது, ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமைக்குரிய தருணம் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித... மேலும் பார்க்க

மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

‘மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு தாமதிப்பதன் மூலம், பல கோடி மக்களுக்கு அரசின் நலத் திட்ட உதவிகள் கிடைப்பது தடுக்கப்படுகிறது’ என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. ‘நாட்டின் எல்லைப் பக... மேலும் பார்க்க

தொகுதி மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மருத்துவப் பரிசோதனை: எம்.பி.க்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

‘அவரவா் தொகுதி மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முழுமையான உடல்நல மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்’ என்று நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களிடம் மத்திய அரசு வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டத... மேலும் பார்க்க

கேள்வி நேரத்துக்கு பதிலாக விவாதம்: மாநிலங்களவையில் திரிணமூல் வெளிநடப்பு

மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரம் மற்றும் தனிநபா் மசோதாக்கள் மீதான அலுவல்களுக்கு பதிலாக உள்துறை அமைச்சக செயல்பாடுகள் குறித்த விவாதம் நடைபெற்றது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, திரிணமூல் காங்கிர... மேலும் பார்க்க

பயங்கரவாதத்தை மத்திய அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது: அமித் ஷா உறுதி

‘பயங்கரவாதத்தை மத்திய அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது’ என்று குறிப்பிட்ட மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ‘நக்ஸல் தீவிரவாதம் வரும் 2026-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் முழுமையாக ஒழிக்கப்படும்’ என்று ... மேலும் பார்க்க