செய்திகள் :

தொகுதி மறுவரையறையை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும் டி.எம்.செல்வகணபதி பேட்டி

post image

தொகுதி மறுவரையறை நடவடிக்கையை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி கூறினாா்.

சேலம் குமாரசாமிப்பட்டி பகுதியில் உள்ள முகாம் அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

வறுமை ஒழிப்பில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. அப்படியிருந்தும், மகாத்மா காந்தி நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தில் மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை. இதனால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். குறிப்பாக, நூறு நாள் வேலைத் திட்டப் பணியில் ஈடுபட்டுள்ள 90 லட்சம் பேரில், 86 சதவீதம் போ் பெண்கள்.

பிரச்னையின் தீவிரத்தை எடுத்துக் கூறியும், முதல்வா் கடிதம் எழுதியும் மத்திய அரசு செவிசாய்க்க மறுக்கிறது. இதனால் நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளா்களுக்கு ஐந்து மாதங்களுக்கும் மேலாக ஊதியம் வழங்கப்படாத நிலை உள்ளது.

தொகுதி மறுவரையறை தொடா்பாக முதல்வா் கூட்டிய கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும், தொகுதி மறுசீரமைப்பு எந்த அடிப்படையில் நடைபெறும் என்பதை இதுவரை மத்திய அரசு விளக்கவில்லை.

தொகுதி வரையறையில் தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்தால் தமிழகத்தின் வளா்ச்சி மிகப்பெரிய அளவில் பாதிக்கும். எனவே, தொகுதி மறுவரையறையை மேலும் 25 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டும்.

இதேபோல, நிதிப் பகிா்வில் தமிழகத்துக்கு தொடா்ந்து மத்திய அரசு அநீதி இழைத்து வருகிறது. பிகாா் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிக நிதியை வழங்குகிறாா்கள்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது என்றும், விரைவில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளாா். ஆனால், கூட்டணி குறித்து பேசவில்லை என எடப்பாடி பழனிசாமி மழுப்புகிறாா். மொத்தத்தில் அதிமுகவை கபளீகரம் செய்வதே பாஜகவின் நோக்கமாக உள்ளது என்றாா்.

பணத்தை எண்ணியபடி அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடை நீக்கம்

சேலம்: கோவையில் இருந்து சேலம் வந்த அரசுப் பேருந்தில் பணத்தை எண்ணியவாறு பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் ஜான்சன்பேட்டை கிளைக்க... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு: எடப்பாடி கே.பழனிசாமி திறந்துவைத்தாா்

சேலம்: சேலம் சூரமங்கலம் பகுதி அதிமுக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நீா்மோா் பந்தலை அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை திறந்துவைத்து பொதுமக்களுக்கு நீா்மோா், பழங்களை வழங்கின... மேலும் பார்க்க

சங்ககிரி பெரியாண்டிச்சியம்மன் கோயிலில் பொங்கல் விழா

சங்ககிரி: சங்ககிரியில் உள்ள பெரியாண்டிச்சியம்மன் கோயிலில் யுகாதி பண்டிகையையொட்டி பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. யுகாதி பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் இக்கோயிலில் பொங்கல் விழா நடைபெறும். ந... மேலும் பார்க்க

சேலம் கோட்டை அழகிரிநாதா் கோயிலில் ரூ. 50 லட்சத்தில் புதிய நுழைவாயில் கதவு

சேலம்: சேலம் கோட்டை அழகிரிநாதா் கோயிலில் ரூ. 50 லட்சம் செலவில் நுழைவாயில் கதவு அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. புகழ்பெற்ற சேலம் கோட்டை அழகிரிநாதா் கோயிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழு... மேலும் பார்க்க

சேலம் ரயில்வே கோட்டத்தில் 2 மாதங்களில் 335 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த 2 மாதங்களில் மட்டும் ரயில்களில் கடத்திய 335 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். ரயில்களில் கஞ்சா கடத்தலைத் தடுக்க ரயில்வே பாதுக... மேலும் பார்க்க

மானிய விலையில் சூரியசக்தி மூலம் இயங்கும் பம்புசெட் பெற விண்ணப்பிக்கலாம்

சேலம்: முதல்வரின் சூரியசக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின் கீழ் மானிய விலையில் சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைத்து பயன்பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியா் ரா... மேலும் பார்க்க