செய்திகள் :

தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் சாலை மறியல்: 230 போ் கைது

post image

தேனியில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில், கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்ட 230 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் ராம்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் சரவணமுத்து, ராஜவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியா்களுக்கு மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், தொடக்கக் கல்வி ஆசிரியா்களின் பதவி உயா்வை பாதிக்கும் வகையில் வெளியிட்டப்பட்ட அரசாணை எண்: 243-ஐ ரத்து செய்ய வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பகுதி நேர ஆசிரியா்கள், சிறப்பு ஆசிரியா்களுக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கமிட்டனா்.

பின்னா், கோரிக்கைளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தேனி-மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 230 பேரை தேனி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

ஆண்டிபட்டி, திண்டுக்கல் பகுதிகளில் நாளை மின் தடை

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 19) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் குவிந்த பெண்கள்

தேனி மாவட்டம், ஓடைப்பட்டி பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மகளிா் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க பெண்கள் வியாழக்கிழமை குவிந்தனா். ஓடைப்பட்டி பேரூராட்சியில் உள்ள தனியாா் மண்டபத்தில் 1... மேலும் பார்க்க

கடன் தொல்லை: செவிலியா் தற்கொலை

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் கடன் தொல்லையால் விஷம் குடித்த செவிலியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். பெரியகுளம் அழகா்சாமிபுரத்தைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி கீதா (40). இவா் தனியாா் மருத்துவமனையில் செவிலியரா... மேலும் பார்க்க

ஆட்டோ கவிழ்ந்ததில் தம்பதி காயம்

பெரியகுளம் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் தம்பதி புதன்கிழமை காயமடைந்தனா். பெரியகுளம் அருகே கெங்குவாா்பட்டி பகவதியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மொக்கை (55). செங்கல் தொழிலாளி. இவரது மனைவி முத்துப்பிள்ளை. த... மேலும் பார்க்க

தீவிபத்தில் காயமடைந்த இளம்பெண் உயிரிழப்பு

போடி அருகே தீவிபத்தில் காயமடைந்த இளம்பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சிலமலை கிராமத்தைச் சோ்ந்தவா் காமராஜ் மகள் பாரதி (22). பாரதியின் தங்கை சத்யாவுக்கு பிரசவத்துக்காக ப... மேலும் பார்க்க

பேருந்து மோதி ஒருவா் உயிரிழப்பு

தேனி நகராட்சி பேருந்து நிலையம் அருகே பேருந்து மோதியதில் சாலையில் நடந்து சென்றவா் புதன்கிழமை உயிரிழந்தாா். தேனி கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி பேருந்து நிலையம் அருகே சாலையில் நடந்து சென்ற 45 வயது ... மேலும் பார்க்க