செய்திகள் :

தொடர்ந்து 14-வது ஆண்டாகக் குறையும் ஜப்பானின் மக்கள் தொகை!

post image

ஜப்பான் நாட்டின் மக்கள் தொகையானது தொடர்ந்து 14வது ஆண்டாகக் குறைந்துள்ளது.

ஜப்பானின் மக்கள் தொகையானது கடந்த 2024-ம் ஆண்டின் அக்டோபர் மாத கணக்குப்படி 12 கோடியாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இது 2023-ம் ஆண்டிலிருந்து 8,98,000 அளவுக்கு குறைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அந்நாட்டில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்தும், குழந்தைப் பிறப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்தும் வருகின்றது.

இந்நிலையில், ஜப்பானில் வாழும் வெளிநாட்டினர் உள்ளிட்ட மொத்த மக்கள் தொகையானது 5,50,000 எண்ணிக்கைகள் சரிந்து 12.3 கோடியாகக் குறைந்துள்ளது. இது தொடர்ந்து 14வது ஆண்டாக சரிவைக் குறிப்பதாக ஜப்பானின் உள்துறை மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் மக்கள் தொகையில், தற்போது அந்நாட்டில் வாழும் 14 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3,43,000 சரிந்து 1.3 கோடியாகக் குறைந்துள்ளதாகவும்; அதேவேளையில், அந்நாட்டில் வாழும் மக்களில் 65 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கையானது 3.6 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அந்நாட்டில் உழைக்கும் மக்களின் எண்ணிக்கையானது (15 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள்) 7.3 கோடியாகக் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, ஜப்பானில் தனி நபரது ஆயுள்காலமானது கடந்த 2000-ம் ஆண்டில் 81.5 (81.5 - 81.6) ஆகக் கணக்கிடப்பட்டிருந்த நிலையில் அது 2021-ல் 84.5 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:மாலத்தீவில் இஸ்ரேலிய கடவுச்சீட்டுகளுக்குத் தடை!

தனுஷின் குபேரா படத்தின் முதல் பாடல் புரோமோ!

நடிகர் தனுஷின் குபேரா திரைப்படத்தின் முதல் பாடல் புரோமோ விடியோ வெளியிடப்பட்டுள்ளது.இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் நாகார்ஜுனா ஆகியோரின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்பட... மேலும் பார்க்க

மாலத்தீவில் இஸ்ரேலிய கடவுச்சீட்டுகளுக்குத் தடை!

மாலத்தீவு நாட்டில் இஸ்ரேலிய கடவுச்சீட்டுகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.சுற்றுலா நாடான மாலத்தீவில் இஸ்ரேல் நாட்டின் கடவுச்சீட்டுகளின் மூலம் அந்நாட்டினுள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாலத்த... மேலும் பார்க்க

தில்லி கல்லூரி வகுப்பறையில் சாணம் பூசப்பட்ட விவகாரம்: பழிவாங்கிய மாணவத் தலைவர்!

தில்லியிலுள்ள ஒரு கல்லூரியின் வகுப்பறையின் சுவரில் மாட்டுச் சாணம் பூசப்பட்ட நிலையில் அந்தக் கல்லூரியின் முதல்வரின் அறையிலும் மாட்டுச் சாணம் பூசப்பட்டுள்ளது.தில்லி அரசின் கீழ் செயல்பட்டு வரும் லக்‌ஷ்மி... மேலும் பார்க்க

காஸா மருத்துவமனை மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்! ஒருவர் பலி!

காஸா நகரத்திலுள்ள மருத்துவமனையின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், மருத்துவப் பணியாளர் ஒருவர் பலியாகியுள்ளார்.காஸா மீதான இஸ்ரேலின் போரில் தங்குமிடங்களை இழந்தும், படுகாயமடைந்தும் பாதிக்கப்பட... மேலும் பார்க்க

ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை வென்ற ஷ்ரேயாஸ் ஐயர்!

ஐசிசியின் மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை இந்திய அணியின் ஷ்ரேயாஸ் ஐயர் வென்றுள்ளார்.இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த மாதத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொ... மேலும் பார்க்க

மே 8, 9, 10-ல் 'அனந்தரா' கலை விழா!

திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாபெரும் கலை விழா வருகிற மே 8 முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாபெரும் கலை விழா தேதி அறிவிப்பு நிகழ்... மேலும் பார்க்க