செய்திகள் :

காஸா மருத்துவமனை மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்! ஒருவர் பலி!

post image

காஸா நகரத்திலுள்ள மருத்துவமனையின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், மருத்துவப் பணியாளர் ஒருவர் பலியாகியுள்ளார்.

காஸா மீதான இஸ்ரேலின் போரில் தங்குமிடங்களை இழந்தும், படுகாயமடைந்தும் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் முவாஸி பகுதியிலுள்ள குவைத்தி ஃபீல்ட் மருத்துவமனையில் தஞ்சமடைந்து வந்தனர்.

இந்நிலையில், இன்று (ஏப்.15) அந்த மருத்துவமனையின் வடக்கு வாயிலின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அங்கு பணிப்புரிந்து வந்த மருத்துவப் பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலில் 9 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் அவர்கள் அனைவரும் அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மற்றும் பணிப்புரிந்த மருத்துவர்கள் அதில், இருவரது உடல்நிலை அபாயக்கட்டத்திலுள்ள எனவும் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து இஸ்ரேல் ராணுவத்தின் தரப்பிலிருந்து எந்தவொரு கருத்தும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக, கடந்த 2023-ல் துவங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரில் காஸா நகரத்திலுள்ள ஏராளமான மருத்துவமனைகளின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்கள் நடத்தி தகர்த்துள்ளது.

இந்தத் தாக்குதல்கள் அனைத்திற்கும் அந்த மருத்துவமனைகளினுள் ஹமாஸ் படையினர் பதுங்கியிருந்தாகவும் அதனால் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டது.

இதனை முற்றிலும் மறுத்த அந்நகர மருத்துவப் பணியாளர்கள் இஸ்ரேல் தொடர்ந்து போர் குற்றங்களில் ஈடுபட்டு காஸாவின் சுகாதார வழிகளை முற்றிலும் அழித்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடந்த ஏப்.13-ம் தேதி அன்று வடக்கு காஸாவிலுள்ள மக்களை வெளியேற உத்தரவிட்ட இஸ்ரேல் ராணுவம் அப்பகுதியிலிருந்த மிகப் பெரிய பொது மருத்துவமனையின் மீது தாக்குதல் நடத்தி அதனை தகர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:உக்ரைன் போருக்கு நான் காரணமல்ல; பைடன் மீது டிரம்ப் பழி!

தனுஷின் குபேரா படத்தின் முதல் பாடல் புரோமோ!

நடிகர் தனுஷின் குபேரா திரைப்படத்தின் முதல் பாடல் புரோமோ விடியோ வெளியிடப்பட்டுள்ளது.இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் நாகார்ஜுனா ஆகியோரின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்பட... மேலும் பார்க்க

தொடர்ந்து 14-வது ஆண்டாகக் குறையும் ஜப்பானின் மக்கள் தொகை!

ஜப்பான் நாட்டின் மக்கள் தொகையானது தொடர்ந்து 14வது ஆண்டாகக் குறைந்துள்ளது. ஜப்பானின் மக்கள் தொகையானது கடந்த 2024-ம் ஆண்டின் அக்டோபர் மாத கணக்குப்படி 12 கோடியாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இது 2023-ம் ஆண்டில... மேலும் பார்க்க

மாலத்தீவில் இஸ்ரேலிய கடவுச்சீட்டுகளுக்குத் தடை!

மாலத்தீவு நாட்டில் இஸ்ரேலிய கடவுச்சீட்டுகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.சுற்றுலா நாடான மாலத்தீவில் இஸ்ரேல் நாட்டின் கடவுச்சீட்டுகளின் மூலம் அந்நாட்டினுள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாலத்த... மேலும் பார்க்க

தில்லி கல்லூரி வகுப்பறையில் சாணம் பூசப்பட்ட விவகாரம்: பழிவாங்கிய மாணவத் தலைவர்!

தில்லியிலுள்ள ஒரு கல்லூரியின் வகுப்பறையின் சுவரில் மாட்டுச் சாணம் பூசப்பட்ட நிலையில் அந்தக் கல்லூரியின் முதல்வரின் அறையிலும் மாட்டுச் சாணம் பூசப்பட்டுள்ளது.தில்லி அரசின் கீழ் செயல்பட்டு வரும் லக்‌ஷ்மி... மேலும் பார்க்க

ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை வென்ற ஷ்ரேயாஸ் ஐயர்!

ஐசிசியின் மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை இந்திய அணியின் ஷ்ரேயாஸ் ஐயர் வென்றுள்ளார்.இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த மாதத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொ... மேலும் பார்க்க

மே 8, 9, 10-ல் 'அனந்தரா' கலை விழா!

திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாபெரும் கலை விழா வருகிற மே 8 முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாபெரும் கலை விழா தேதி அறிவிப்பு நிகழ்... மேலும் பார்க்க