செய்திகள் :

ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை வென்ற ஷ்ரேயாஸ் ஐயர்!

post image

ஐசிசியின் மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை இந்திய அணியின் ஷ்ரேயாஸ் ஐயர் வென்றுள்ளார்.

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த மாதத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் சிறப்பாக செயல்பட்டமைக்காக ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: வயதான ஆட்டநாயகன்! தோனி படைத்த சாதனைகள்!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் 243 ரன்கள் குவித்தார். இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையும் அவரையேச் சேரும். ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா மற்றும் ஜேக்கோப் டஃபி இடம்பெற்றிருந்த நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதினை வென்றது குறித்து ஷ்ரேயாஸ் ஐயர் பேசியதாவது: ஐசிசியின் மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை வென்றதை உண்மையில் சிறந்த கௌரவமாக கருதுகிறேன். சாம்பியன்ஸ் டிராபியை வென்ற மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதினை வென்றது மிகவும் சிறப்பானது.

இந்த தருணத்தை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். இந்திய அணியின் வெற்றிக்கு எனது பங்களிப்பை வழங்கியதில் மிகுந்த மகிழ்ச்சி. அணியில் உள்ள சக வீரர்கள், பயிற்சியாளர்கள் அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். இந்திய அணியின் ரசிகர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இதையும் படிக்க: தோனியின் புதியதொரு மைல்கல் சாதனை: ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை!

ஐசிசியின் பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை இந்திய வீரர் ஷுப்மன் கில் வென்றிருந்த நிலையில், மார்ச் மாதத்துக்கான விருதினை ஷ்ரேயாஸ் ஐயர் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் குபேரா படத்தின் முதல் பாடல் புரோமோ!

நடிகர் தனுஷின் குபேரா திரைப்படத்தின் முதல் பாடல் புரோமோ விடியோ வெளியிடப்பட்டுள்ளது.இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் நாகார்ஜுனா ஆகியோரின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்பட... மேலும் பார்க்க

தொடர்ந்து 14-வது ஆண்டாகக் குறையும் ஜப்பானின் மக்கள் தொகை!

ஜப்பான் நாட்டின் மக்கள் தொகையானது தொடர்ந்து 14வது ஆண்டாகக் குறைந்துள்ளது. ஜப்பானின் மக்கள் தொகையானது கடந்த 2024-ம் ஆண்டின் அக்டோபர் மாத கணக்குப்படி 12 கோடியாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இது 2023-ம் ஆண்டில... மேலும் பார்க்க

மாலத்தீவில் இஸ்ரேலிய கடவுச்சீட்டுகளுக்குத் தடை!

மாலத்தீவு நாட்டில் இஸ்ரேலிய கடவுச்சீட்டுகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.சுற்றுலா நாடான மாலத்தீவில் இஸ்ரேல் நாட்டின் கடவுச்சீட்டுகளின் மூலம் அந்நாட்டினுள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாலத்த... மேலும் பார்க்க

தில்லி கல்லூரி வகுப்பறையில் சாணம் பூசப்பட்ட விவகாரம்: பழிவாங்கிய மாணவத் தலைவர்!

தில்லியிலுள்ள ஒரு கல்லூரியின் வகுப்பறையின் சுவரில் மாட்டுச் சாணம் பூசப்பட்ட நிலையில் அந்தக் கல்லூரியின் முதல்வரின் அறையிலும் மாட்டுச் சாணம் பூசப்பட்டுள்ளது.தில்லி அரசின் கீழ் செயல்பட்டு வரும் லக்‌ஷ்மி... மேலும் பார்க்க

காஸா மருத்துவமனை மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்! ஒருவர் பலி!

காஸா நகரத்திலுள்ள மருத்துவமனையின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், மருத்துவப் பணியாளர் ஒருவர் பலியாகியுள்ளார்.காஸா மீதான இஸ்ரேலின் போரில் தங்குமிடங்களை இழந்தும், படுகாயமடைந்தும் பாதிக்கப்பட... மேலும் பார்க்க

மே 8, 9, 10-ல் 'அனந்தரா' கலை விழா!

திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாபெரும் கலை விழா வருகிற மே 8 முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாபெரும் கலை விழா தேதி அறிவிப்பு நிகழ்... மேலும் பார்க்க