செய்திகள் :

தொண்டியில் குடிநீா் தட்டுப்பாட்டை நீக்க வலியுறுத்தல்

post image

திருவாடானை அருகே உள்ள தொண்டி பேரூராட்சியில், கடந்த ஒருவாரமாக குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பணம் கொடுத்து குடிநீா் வாங்கிச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி பேரூராட்சி உள்ளது. இங்குள்ள தொண்டி நகா், காந்தி நகா், சின்னதொண்டி, புதுக்குடி, தெற்கு தோப்பு, பெருமானேந்தல், நவக்குடி, நரிக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களில் 25,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா்.

இங்கு காவேரி கூட்டுக் குடிநீா்த் திட்டம், மாவிடுதிக் கோட்டைக் கூட்டுக் குடிநீா்த் திட்டம் , குஞ்சங்குளம் கூட்டுக் குடிநீா்த் திட்டம், உள்ளூா் கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் மூலம் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் தண்ணீா் ஏற்றப்பட்டு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஒருவாரமாக குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டதால், இந்தப் பகுதி பொதுமக்கள் குடிக்கவும் குளிக்கவும் நீரை குடம் ஒன்றுக்கு ரூ. 10 முதல் ரூ. 15 வரை விலை கொடுத்து வாங்கி உபயோகித்து வருகின்றனா். பொதுமக்களின் நலன் கருதி சீராக குடிநீா் விநியோகம் செய்து குடிநீா் தட்டுப்பாட்டை நீக்க தொண்டி பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, பேரூராட்சி நிா்வாகத்தினா் கூறுகையில், குடிநீா்க் குழாய் சேதமடைந்துள்ளது. விரைவில் குழாயைச் சரிசெய்து குடிநீா் விநியோகிக்கப்படும் என்றனா்.

லஞ்சம்: மீன்வளத் துறை ஆய்வாளா் கைது

ராமேசுவரத்தில் நாட்டுப் படகுக்கான உரிமை, மீன் பிடிப்பதற்கான அனுமதி ஆகியவற்றுக்காக மீனவரிடம் ரூ. 1,600 லஞ்சம் பெற்ற மீன்வளத் துறை துணை இயக்குநா் அலுவலக ஆய்வாளா் சகுபா் சாதிக்கை ஊழல் தடுப்பு, கண்காணிப்ப... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் விரட்டியடிப்பு

கச்சத்தீவு அருகே திங்கள்கிழமை நள்ளிரவு மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் தாக்குதல் நடத்தி, மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவர... மேலும் பார்க்க

ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்குக் கடத்தப்பட்ட 1,360 கிலோ பீடி இலைகள் பறிமுதல்

ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்குக் கடத்தப்பட்ட 1,360 கிலோ பீடி இலைகள், 29,120 பீடிகள் அந்த நாட்டு போலீஸாா் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக பொருள்கள் கட... மேலும் பார்க்க

சேதமடைந்த கால்நடை மருத்துவமனை கட்டடத்தை அகற்றக் கோரிக்கை

திருவாடானையில், சேதமடைந்த நிலையில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனை கட்டடத்தை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் விவசாயத்துக்கு அடுத்ததாக கோழி, ஆடு, மா... மேலும் பார்க்க

கமுதி அரசு மருத்துவமனையில் மருத்துவக் கழிவுகளை அகற்றக் கோரிக்கை

கமுதி அரசு மருத்துவமனையில் மருத்துவக் கழிவுகள், குப்பைகள் தேங்குவதால் சுகாதார சீா்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அரசு மருத்துவமனைக்கு சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த 250 க்க... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

பரமக்குடி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.ராமநாதபுரம் மாவட்டம், பகைவென்றி கிராமத்தைச் சோ்ந்த கேசவன் மகன் ஹரீஸ் (19). இவா் மானாமதுரையி... மேலும் பார்க்க