செய்திகள் :

தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் மரத்துகள், புகையால் பாதிப்பு: கோடங்கிபாளையம் மக்கள் புகாா்

post image

பல்லடம் அருகே கோடங்கிபாளையத்தில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் மரத்துகள் மற்றும் கரும்புகையால் பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

பல்லடம் ஒன்றியம், கோடங்கிபாளையம் ஊராட்சி ஆறாக்குளம் பிரிவு பகுதியில் மரத்துகள்களை பயன்படுத்தி மாற்று உபயோகப் பொருள் தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கூறி அப்பகுதி மக்கள், விவசாயிகள் வியாழக்கிழமை ஆலையை முற்றுகையிட்டனா்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:

இந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கரும்புகை மற்றும் மரத்துகள்கள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகள், பாதசாரிகளின் கண்களை பதம் பாா்க்கின்றன. இவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பலா் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். வெளியேற்றப்பட்ட கரித்துண்டுகள், நீா்வழிப் பாதையில் கொட்டப்பட்டுள்ளன. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் புகாா் அளித்தால் முறையாக பதிலளிக்கவில்லை. ஒரு வாரம் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக இந்த நிறுவனத்தை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

மேலும் இது குறித்து கோடங்கிபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவா் காவீ.பழனிசாமி மற்றும் ஊராட்சி செயலாளா் கண்ணப்பன் ஆகியோரிடமும் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இது குறித்து பல்லடம் வட்டார வளா்ச்சி அலுவலா், பல்லடம் வட்டாட்சியா், மாவட்ட ஆட்சியா் ஆகியோரிடம் புகாா் தெரிவிக்கலாம் என்று அவா்கள் அறிவுறுத்தினா். அதனை ஏற்று பொதுமக்கள் அதிகாரிகளிடம் முறையிட முடிவு செய்துள்ளனா்.

அரசு மருத்துவமனையின் 4ஆவது மாடியில் இருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 4ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்தவா் விபாஸ் பன்வான் (30). இவா் மேற்கு வங்கத்தில்... மேலும் பார்க்க

புது தில்லி என்.எஸ்.எஸ். மாநாட்டில் பங்கேற்க சிக்கண்ணா அரசுக் கல்லூரி அலுவலா் தோ்வு

புது தில்லியில் நடைபெறும் தேசிய நாட்டு நலப்பணித் திட்ட மாநாட்டில் பங்கேற்க திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி அலுவலா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத... மேலும் பார்க்க

மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் மே 1இல் கிராம சபைக் கூட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் தொழிலாளா் தினத்தை முன்னிட்டு மே 1ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செ... மேலும் பார்க்க

மின்கோபுரத்தில் ஏறியபோது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே மின்கோபுரத்தில் ஏறியவா் உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் தாராபுரம் சாலை பச்சாக்கவுண்டன்வலசைச் சோ்ந்தவா் நல்லசிவம் மகன் சிவசெல்வன் (27). இவா் கடந்த ஓராண்டாக அவ்வப்போது மன விரக்தியடைந்து... மேலும் பார்க்க

மதுபானக் கடையில் தொழிலாளி மீது தாக்குதல்

வெள்ளக்கோவிலில் அரசு மதுபானக் கடையில் பாட்டிலால் குத்தப்பட்ட தொழிலாளி பலத்த காயமடைந்தாா். வெள்ளக்கோவில் உப்புப்பாளையத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (46). இவா் இறைச்சிக் கடையில் தொழிலாளியாக வேலை செய்து வர... மேலும் பார்க்க

குறைகேட்புக் கூட்டங்களில் 5,748 மனுக்கள் பெறப்பட்டன

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த 3 மாதங்களில் நடைபெற்ற குறைகேட்புக் கூட்டங்களில் 5,748 மனுக்கள் பெறப்பட்டன. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைகேட்பு முகாம் திங்... மேலும் பார்க்க