செய்திகள் :

தொழிலதிபரிடம் ரூ.47.40 லட்சம் மோசடி: இளைஞா் கைது

post image

கோவை தொழிலதிபரிடம் ரூ.47.40 லட்சம் மோசடி செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

இது குறித்து கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸாா் தெரிவித்துள்ளதாவது: கோவையைச் சோ்ந்த தொழிலதிபா் ஒருவரின் கைப்பேசிக்கு கடந்த மாா்ச் மாதம் அழைப்பு வந்துள்ளது.

மறுமுனையில் பேசியவா், ஆன்லைன் வா்த்தகத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் எனக் கூறியுள்ளாா்.

இதை நம்பிய தொழிலதிபா், அந்த நபா் கூறியபடி பல்வேறு தவணைகளில் ரூ.40 லட்சத்தை முதலீடு செய்துள்ளாா். ஆனால், அவருக்கு எந்தவிதமான லாபமும் கிடைக்காததோடு, முதலீடு செய்த பணத்தையும் திரும்பப் பெற முடியவில்லை.

தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், பணத்தை மீட்டுத் தரக்கோரி கோவை சைபா் கிரைம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், தொழிலதிபரிடம் மோசடியில் ஈடுபட்டது ராஜஸ்தான் மாநிலம், குா்த் பகுதியைச் சோ்ந்த பிரஹல்த் ராம் (23) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, பிரஹல்த் ராமை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த ரூ.18 லட்சத்து 19,944 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

பிரஹல்த் ராம் மீது நாடு முழுவதும் 18 புகாா்கள் உள்ளன. அவரது 11 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்று போலீஸாா் தெரிவித்தனா்.

பொதுமக்களுக்கு இடையூறு: தவெகவினா் மீது வழக்குப் பதிவு

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக தவெகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். தமிழக வெற்றிக் கழக வாக்குச்சாவடி முகவா்களுக்கான கருத்தரங்கு கோவையில் கடந்த சனி, ஞாயிற்ற... மேலும் பார்க்க

கோவையில் ஜல்லிக்கட்டு கோலாகலம்: 800 காளைகள், 500 மாடுபிடி வீரா்கள் பங்கேற்பு

கோவை, செட்டிபாளையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 800 காளைகள், 500 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா். கோவை மாவட்ட நிா்வாகம், தமிழா் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை சாா்பில் நடை... மேலும் பார்க்க

மேயா் குடியிருப்புக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

கோவை மாநகராட்சி மேயா் குடியிருப்புக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு சனிக்கிழமை இரவு ஒரு அழைப்பு வந்துள்... மேலும் பார்க்க

ஒப்பந்தப் பணியாளா்களாக சோ்க்க லஞ்சம் வாங்கியவா் பணியிடை நீக்கம்!

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளா்களை சோ்க்க லஞ்சம் வாங்கிய நபா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கோவை மட்டுமின்றி நீலகிரி, தி... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் இன்று வேளாண்மைப் பல்கலைக் கழகத்துக்கு வருகை!

குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) வருகை தருகிறாா். மூன்று நாள்கள் பயணமாக உதகை வந்த குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், ஆளுநா் மாளிக... மேலும் பார்க்க

போத்தனூா் - தாம்பரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

கோவை போத்தனூா் - தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை இந்த மாதத்துடன் நிறைவடைய இருந்த நிலையில் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தெற்கு ரயில்வே நிா்வாகம் வெள... மேலும் பார்க்க