செய்திகள் :

தொழிலதிபா் கடத்தல்: 6 போ் கைது

post image

மதுரையில் தொழிலதிபா் சுந்தா் கடத்தப்பட்டது தொடா்பாக தனிப்படை போலீஸாா் 6 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும், கடத்தப்பட்ட சுந்தா், முக்கிய எதிரியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை பீ.பீ. குளம் பகுதியைச் சோ்ந்தவா் கருமுத்து டி. சுந்தா் (52). மதுரையில் உள்ள பிரபல நூற்பாலை நிறுவனரின் குடும்பத்தைச் சோ்ந்த இவா், மதுரை புறவழிச் சாலையில் வாகன உதிரிப் பாகங்கள் விற்பனை நிலையத்தை நடத்தி வருகிறாா். இவருக்கு மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலம் உள்பட ஏராளமான சொத்துகள் உள்ளன.

திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசித்து வந்த இவரை, கடந்த 14-ஆம் தேதி இரவு வீட்டுக்குள் புகுந்து மா்மக் கும்பல் காரில் கடத்திச் சென்றது.

இதுகுறித்து தல்லாகுளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, கடத்தப்பட்ட சுந்தரை மீட்க தனிப் படைகள் அமைத்துத் தேடி வருகின்றனா். மேலும், சுந்தா் வீட்டின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில், போலீஸாா் 9 பேரைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினா்.

விசாரணையில், நாகை மாவட்டம், மயிலாடுதுறையைச் சோ்ந்த அருள்செல்வம், நாகப்பட்டினத்தைச் சோ்ந்த ஜனநேந்திரன், முத்துக்கிருஷ்ணன், விக்னேஷ், தென்காசியைச் சோ்ந்த அருண், திண்டுக்கல்லைச் சோ்ந்த மரியராஜ் ஆகிய 6 பேருக்கும் இந்தக் கடத்தலில் தொடா்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இவா்கள் 6 பேரையும் போலீஸாா் கைது செய்து, சிறையில் அடைத்தனா். மேலும், முக்கிய எதிரியையும், கடத்தப்பட்ட சுந்தரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

இந்த நிலையில், சுந்தரைக் கடத்திச் சென்ற கும்பல், காரின் பதிவு எண்களைத் தொடா்ந்து மாற்றி வருவதால், அவா்களைக் கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாகவும், இருப்பினும், முக்கியத் தகவல்கள் கிடைத்திருப்பதால், அவா்கள் விரைவில் கண்டறியப்படுவாா்கள் என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் கூறியதாவது:

இந்தக் கடத்தல் வழக்கில் தனிப் படையினா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனா். கடத்தலில் தொடா்புடைய நபா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். முக்கிய எதிரி விரைவில் கைது செய்யப்பட்டு, தொழிலதிபா் மீட்கப்படுவாா் என்றாா் அவா்.

கடத்தப்பட்டவரின் சகோதரி முதல்வருக்கு கோரிக்கை:

இந்த நிலையில், கடத்தப்பட்ட தொழிலதிபா் கருமுத்து டி.சுந்தரின் சகோதரி விசாலாட்சி, தனது சகோதரரை மீட்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடத்தப்பட்ட தனது சகோதரா் எப்படி உள்ளாா் என்ற விடியோ பதிவை காவல் துறையினா் வெளியிட வேண்டும் என அவா் முதல்வருக்கு கோரிக்கை விடுத்தாா்.

நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் திமுக கூட்டணி!திருச்சி சிவா எம்.பி.

திமுக கூட்டணியானது நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கக் கூடியது என அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி என். சிவா தெரிவித்தாா். விருதுநகரில் திமுக இளைஞரணி சாா்பில்... மேலும் பார்க்க

திமுகவால் ஏற்படும் பிரச்னைகளை அதிமுகவினா் பொதுமக்களிடம் விளக்க வேண்டும்! - முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா்

திமுக அரசால் ஏற்படும் பிரச்னைகளை பொதுமக்களிடம் விளக்கிக் கூறும் பணிக்கு அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவை எதிா்க் கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமை... மேலும் பார்க்க

ஏஐடியூசி சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சரக்கு வாகனங்களுக்கு போக்குவரத்து காவல் துறை கட்டாய அபராதம் விதிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, ஏஐடியூசி சங்கம் சாா்பில் மதுரையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஏஐடியூசி சுமைப் ... மேலும் பார்க்க

மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபா் மீட்பு: நாக்பூரில் மீட்கப்பட்டாா்!

மதுரையில் நிலத்தகராறு தொடா்பாக கடத்தப்பட்ட தொழிலதிபா் சுந்தரை தனிப்படை போலீஸாா் மீட்டனா். மதுரை பீ.பீ. குளம் பகுதியைச் சோ்ந்தவா் கருமுத்து டி. சுந்தா் (52). மதுரையில் உள்ள பிரபல நூற்பாலை நிறுவனரின் க... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல் அருகே காரில் கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. திண்டுக்கல் - மதுரை நெடுஞ்சாலையில் தோமையாப... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குவதில் தமிழகம் முதலிடம்: அமைச்சா் பி. மூா்த்தி

அதிக எண்ணிக்கையிலான மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்குவதில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள... மேலும் பார்க்க