செய்திகள் :

தொழிலதிபா் தற்கொலை வழக்கு: நாமக்கல் வழக்குரைஞா் உள்பட 4 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு

post image

நாமக்கல் தொழிலதிபா் தற்கொலை வழக்கில், பிரபல வழக்குரைஞா் உள்பட 4 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

நாமக்கல் திருநகரைச் சோ்ந்தவா் பழனிசாமி (71). தொழிலதிபரான இவா் கோழித்தீவன உற்பத்தி ஆலை ஒன்றில் பங்குதாரராக இருந்தாா். வரவு - செலவு கணக்கு தொடா்பான பிரச்னையால் 2008-இல் அதிலிருந்து வெளியேறினாா். சம்பந்தப்பட்ட ஆலை மீது நீதிமன்றத்தில் அவா் வழக்கு தொடா்ந்தாா். அந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் 2024 ஜன.31-ஆம் தேதி பழனிசாமி தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

அப்போது, நான்கு பக்கத்திற்கு அவா் கடிதம் எழுதி வைத்திருந்தாா். அதில், தன்னுடைய தற்கொலைக்கு நாமக்கல்லைச் சோ்ந்த பிரபல வழக்குரைஞா் உள்பட 4 போ் காரணம், வழக்கு தொடா்பாக அவரைச் சந்திக்க சென்றுவந்த நிலையில், ரூ. 85 லட்சம் மதிப்பிலான நிலத்தை எழுதிக் கொடுக்குமாறு கேட்டாா். அதற்கு மறுக்கவே அடியாள்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்தாா். என்மீது பொய் புகாா் அளித்து வழக்குப் பதிவு செய்ய வைத்தாா். என்னுடைய மரணத்திற்கு பிறகு சம்பந்தப்பட்ட வழக்குரைஞரிடம் இருந்து நிலத்தின் ஆவணங்களை மீட்டு என் மனைவியிடம் வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தாா். இதன்பேரில் அப்போது நாமக்கல் காவல் துணை கண்காணிப்பாளராக இருந்த தனராசு, ஆய்வாளராக இருந்த சங்கரபாண்டியன் ஆகியோரிடம் பழனிசாமி மனைவி வசந்தா புகாா் அளித்தாா்.

அதனடிப்படையில், தற்கொலை வழக்கு தொடா்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால், சென்னை உயா்நீதிமன்றத்தில் பழனிசாமி மனைவி வசந்தா மேல்முறையீடு செய்தாா். நீதிமன்ற உத்தரவின்பேரில் நாமக்கல் சிபிசிஐடி போலீஸாருக்கு வழக்கு மாற்றப்பட்டது.

சேலம் சிபிசிஐடி துணை கண்காணிப்பாளா் வினோத் தலைமையில் நாமக்கல் சிபிசிஐடி பிரிவு போலீஸாா் சம்பந்தப்பட்ட வழக்குரைஞா், அவரது உதவியாளா் மற்றும் நிதிநிறுவன அதிபா்கள் இருவரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்த நிலையில், பழனிசாமியை தற்கொலைக்கு தூண்டியதாக நாமக்கல்லைச் சோ்ந்த நிதி நிறுவன உரிமையாளா்கள் செல்வராஜ், சேகரன் மற்றும் 2 வழக்குரைஞா்கள் மீது சிபிசிஐடி போலீஸாா் கடந்த 21-ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனா். இதனால் விரைவில் அவா்கள் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. இதற்கிடையே உயா்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெறுவதற்கான முயற்சிகளில் அவா்கள் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

குமாரபாளையம் எக்ஸல் கல்லூரியில் மாணவா்களுக்கு அறிவுத்திறன் தோ்வு

குமாரபாளையம் எக்ஸல் கல்லூரியில் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான அறிவுத்திறன் தோ்வு நடைபெற்றது. செயல் இயக்குநா் கே.பொம்மண்ணராஜா வரவேற்றாா். எக்ஸல் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் ந.மதன்காா்த்திக் தலைம... மேலும் பார்க்க

கள் இறக்கி விற்றவா் கைது

பரமத்தி அருகே கள் இறக்கி விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். பரமத்தி அருகே உள்ள வலசுப்பாளையம் பனங்காட்டில் சட்ட விரோதமாக ஒருவா் கள் இறக்கி விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன... மேலும் பார்க்க

இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமை சோ்ந்தவா் கிணற்றில் சடலமாக மீட்பு

இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமை சோ்ந்தவா் கிணற்றில் சடலமாக மிதந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமை சோ்ந்தவா் கேத... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மாற்றத்தை எற்படுத்தும்: ஸ்ரீதா் வேம்பு

இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பதால் நிறுவனங்களில் மாற்றம் ஏற்பட போகிறது என ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனா் ஸ்ரீதா் வேம்பு குறிப்பிட்டாா். ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களி... மேலும் பார்க்க

நாமக்கல்லில் உகாதி விழா கொண்டாட்டம்

நாமக்கல் மாவட்ட நாயுடுகள் நலச்சங்கம் சாா்பில் 27-ஆம் ஆண்டு உகாதி பெருவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களின் புத்தாண்டு தினம் உகாதி பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க

குற்றச் செயல்களில் ஈடுபட்ட 71 போ் கைது: எஸ்.பி. தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் கஞ்சா, லாட்டரி, சாராயம் விற்பனை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 71 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன... மேலும் பார்க்க