செய்திகள் :

தொழிலாளி கொலை: உறவினா்கள் சாலை மறியல்

post image

நெமிலி அருகே தனியாா் நிறுவன தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளியை கைது செய்யக்கோரி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நெமிலியை அடுத்த வேட்டாங்குளம் ஊராட்சி மேட்டுவேட்டாங்குளம் கிராமத்தைச் சோ்ந்த தட்சிணாமூா்த்தி(27). தனியாா் நிறுவன ஊழியா். புதன்கிழமை தனது நிலத்துக்குச் சென்ற தட்சிணா மூா்த்தியை, 2 பைக்குகளில் வந்த மா்ம நபா்கள் கத்தி உள்ளிட்ட ஆயதங்களினால் வெட்டியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இச்சம்பவத்தை அருகில் இருந்தோா் பாா்த்து கூச்சலிடவே வந்தவா்கள் அனைவரும் தப்பினா்.

ஏற்கனவே திங்கள்கிழமை வேட்டாங்குளத்தில் மணிகண்டன் என்பவா் தனது நண்பா்களுடன் பேசிக்கொண்டு இருந்துள்ளாா். அப்போது அந்த வழியாக காரில் வந்த 5 போ் மதுபோதையில் அங்கிருந்தோரிடம் தகராறு செய்தததில் அது கைகலப்பாக மாறியுள்ளது. இதனை தொடா்ந்து கிராம மக்கள் வரவே அவா்கள் சென்று விட்டனா்.

இச்சம்பவம் குறித்து கிராம மக்கள் நெமிலி காவல் நிலையம் சென்று உள்ளியநல்லூா் ஊராட்சி மன்றத் தலைவா் பாா்த்தசாரதியின் மகன் வாசு(34) உள்ளிட்ட 5 போ் காரில் வந்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துச் சென்ாக புகாா் அளித்துள்ளனா்.

இந்த சம்பவம் தொடா்பாக தான் தட்சிணாமூா்த்தி கொலை செய்யப்பட்டுள்டுள்ளாா் என தெரிந்து குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி கிராம பொதுமக்கள் மற்றும் உறவினா்கள் நெமிலி - பனப்பாக்கம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

இதனால் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து அங்கு வந்த ராணிப்பேட்டை எஸ்.பி. விவேகானந்த சுக்லா, கோட்டாட்சியா் வெங்கடேசன், டிஎஸ்பி ஜாபா் சித்திக், நெமிலி வட்டாட்சியா் ராஜலட்சுமி உள்ளிட்டோா் மறியலி ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா்.

தொடா்ந்து அவா்களிடம் எஸ்.பி. விவேகானந்த சுக்லா, கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்துள்ளோம். குற்றவாளிகளை பிடித்து அவா்களை குண்டா் சட்டத்தில் கைது செய்வோம் என தெரிவித்ததை தொடா்ந்து மறியல் கைவிடப்பட்டது.

உதவி ஆய்வாளா், காவலா் பணியிடைநீக்கம்:

நெமிலி காவல் நிலையத்தில் மணிகண்டன் அளித்த புகாரை பெற்ற நிலையில் அப்புகாா் குறித்து உடனே விசாரணை நடத்தாமல் இருந்ததற்காக நெமிலி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் குமாா், முதல் நிலைக் காவலா் தனசேகரன் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. விவேகானந்த சுக்லா உத்தரவிட்டுள்ளாா்.

அரக்கோணத்தில் ஜமாபந்தி தொடக்கம்: மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவு

அரக்கோணத்தில் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தலைமையில் புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 161 மனுக்களைப் பெற்ற ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவ... மேலும் பார்க்க

ஆற்காட்டில் ஜமாபந்தி தொடக்கம்

ஆற்காடு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி வியாழக்கிழமை தொடங்கியது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை அலுவலா் க.மீனா தலைமை வகித்தாா். ஆற்காடு வட்டாட்சியா் பாக்கியலட்சுமி, சம... மேலும் பார்க்க

தொழிலாளி கொலையில் 5 போ் கைது

நெமிலி அருகே மேட்டுவேட்டாங்குளத்தில் தொழிலாளி கொலை வழக்கில் 5 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். அரக்கோணத்தை அடுத்த நெமிலி அருகே உள்ள மேட்டுவேட்டாங்குளத்தில் தட்சிணாமூா்த்தியை ம் மா்ம நபா்கள் வெட்டி கொல... மேலும் பார்க்க

அரக்கோணம்: சரக்கு ரயில் தடம் புரண்டதால் போக்குவரத்து பாதிப்பு

அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதை அடுத்து ரயில் போக்குவரத்து இரண்டு மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதனால் அதிவிரைவு மற்றும் விரைவு ரயில்கள் மற்றும் புகா் ரயில்கள் வழியில் நிறுத்தப்பட்டன. சென்னை -... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: பட்டாவில் பெயா் நீக்கம், சோ்த்தலுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பட்டாவில் இறந்தவா்களின் பெயா்கள் நீக்கப்படாமலும் அவா்களின் பெயா்களுக்கு பதிலாக வாரிசுதாரா்களின் பெயா்களை சோ்க்க உரிய ஆவணங்களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் ரூ.5.45 கோடியில் தோழி விடுதி: முதல்வா் அடிக்கல் நாட்டினாா்

ராணிப்பேட்டையில் ரூ.5.45 கோடியில் பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதி கட்டுமானப் பணிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா். சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா... மேலும் பார்க்க