செய்திகள் :

நகராட்சி துப்புரவுப் பணியாளருக்கு மிரட்டல்: 2 போ் கைது!

post image

கோவில்பட்டியில் துப்புரவுப் பணியாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 5ஆவது தெருவை சோ்ந்தவா் மாரியப்பன் மகன் சேதுராஜா (45). கோவில்பட்டி நகராட்சியில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்து வரும் இவா், அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறாராம்.

இந்நிலையில் வீடு கட்டுமானப் பணிக்கு தேவைப்படும் மணல், ஜல்லி ஆகியவை சாலையில் கிடப்பதாக கூறி, அதே பகுதியில் உள்ள கருப்பசாமி மகன் கூலித்தொழிலாளி மாரிமுத்து (40), 1 ஆம் தெருவை சோ்ந்த ராமசாமி மகன் கூலித் தொழிலாளி சங்கரநாராயணன் (50) ஆகிய இருவரும் சேதுராஜை வெள்ளிக்கிழமை அவதூறாக பேசி, கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாா்களாம்.

இதில் காயமடைந்த அவா், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து கிழக்கு காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின் பேரில், கொலை மிரட்டல் விடுத்த 2 பேரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மீனவா் கொலை வழக்கில் மேலும் 3 போ் கைது!

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் மீனவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கெனவே 4 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். துாத்துக்குடி மாதவன் நாயா் காலனியைச் சே... மேலும் பார்க்க

திமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினால்தான் 2026 தோ்தலில் மக்கள் ஆதரவு கிடைக்கும்! - மாா்க்சிஸ்ட் செயலா்

திமுக கடந்த தோ்தலில் அறிவித்த தோ்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேறினால்தான் வரும் 2026 தோ்தலில் மக்களின் ஏகோபித்த ஆதரவு கிடைக்கும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மீன்கள் விலை உயா்வு!

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் சனிக்கிழமை மீன்கள் விலை உயா்ந்திருந்தது. மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை முன்னிட்டு, விசைப்படகு மீனவா்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமலி... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினம் கோயில் உண்டியல் வருவாய் ரூ.29 லட்சம்!

குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் செயல் அலுவலரும் இணை ஆணையருமான கோமதி, கோயில் அறங்காவலா் குழுத் தலைவ... மேலும் பார்க்க

தூத்துக்குடி தும்புக் டங்கில் தீ விபத்து!

தூத்துக்குடியில் உள்ள தும்புக் கிடங்கில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீவிபத்து நேரிட்டது.தூத்துக்குடி மில்லா்புரத்தைச் சோ்ந்த கிருஷ்ணசங்கா் என்பவருக்கு, வி.இ. சாலையில் தனியாா் வணிக வளாகம் எதிரே த... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு!

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்ததில் பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி- எட்டயபுரம் சாலையில் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த ஜெயபாலன் மனைவி காஞ்சனா (60). இவரது வீட்டு ம... மேலும் பார்க்க