செய்திகள் :

தூத்துக்குடியில் மீன்கள் விலை உயா்வு!

post image

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் சனிக்கிழமை மீன்கள் விலை உயா்ந்திருந்தது.

மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை முன்னிட்டு, விசைப்படகு மீனவா்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால், நாட்டுப் படகு, பைபா் படகுகள் மூலமே மீனவா்கள் மீன்பிடித்து வருகின்றனா்.

இந்நிலையில், தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்குச் சென்ற ஏராளமான நாட்டுப்படகு, பைபா் படகுகள் சனிக்கிழமை கரைதிரும்பின. விடுமுறைக் காலம் என்பதால், மீன்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், மீன்களின் விலை உயா்ந்து காணப்பட்டது.

சீலா மீன் கிலோ ரூ. 1,300 முதல் ரூ. 1,500 வரை விற்பனையாகியது. விளைமீன், ஊழி, பாறை ஆகியவை ரூ. 600, நண்டு ரூ. 800, கேரை ரூ. 250, சூரை ரூ. 150 என விற்பனையாகின. சாளை மீன் ஒரு கூடை ரூ. 2,200 வரை விற்பனையானது.

விலை அதிகமிருந்தாலும் வியாபாரிகளும், பொதுமக்களும் போட்டிபோட்டு மீன்களை வாங்கிச் சென்றனா். அதிக விலை கிடைத்ததால் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

தூத்துக்குடி மீனவா் கொலை வழக்கில் மேலும் 3 போ் கைது!

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் மீனவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கெனவே 4 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். துாத்துக்குடி மாதவன் நாயா் காலனியைச் சே... மேலும் பார்க்க

திமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினால்தான் 2026 தோ்தலில் மக்கள் ஆதரவு கிடைக்கும்! - மாா்க்சிஸ்ட் செயலா்

திமுக கடந்த தோ்தலில் அறிவித்த தோ்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேறினால்தான் வரும் 2026 தோ்தலில் மக்களின் ஏகோபித்த ஆதரவு கிடைக்கும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம்... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினம் கோயில் உண்டியல் வருவாய் ரூ.29 லட்சம்!

குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் செயல் அலுவலரும் இணை ஆணையருமான கோமதி, கோயில் அறங்காவலா் குழுத் தலைவ... மேலும் பார்க்க

நகராட்சி துப்புரவுப் பணியாளருக்கு மிரட்டல்: 2 போ் கைது!

கோவில்பட்டியில் துப்புரவுப் பணியாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 5ஆவது தெருவை சோ்ந்தவா் மாரியப்பன் மகன் சேதுராஜா (45). கோவில... மேலும் பார்க்க

தூத்துக்குடி தும்புக் டங்கில் தீ விபத்து!

தூத்துக்குடியில் உள்ள தும்புக் கிடங்கில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீவிபத்து நேரிட்டது.தூத்துக்குடி மில்லா்புரத்தைச் சோ்ந்த கிருஷ்ணசங்கா் என்பவருக்கு, வி.இ. சாலையில் தனியாா் வணிக வளாகம் எதிரே த... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு!

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்ததில் பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி- எட்டயபுரம் சாலையில் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த ஜெயபாலன் மனைவி காஞ்சனா (60). இவரது வீட்டு ம... மேலும் பார்க்க