செய்திகள் :

இவர்கள் மூவரும் இங்கிலாந்துக்கு சவாலளிப்பார்கள்; ரவி சாஸ்திரி கூறுவதென்ன?

post image

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்து அணிக்கு சவாலளிப்பார்கள் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடர் நிறைவடைந்த பிறகு இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் ஜூன் 20 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இதையும் படிக்க: சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியது எப்படி? டேனியல் வெட்டோரி பதில்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் முகமது ஷமி இல்லாதது அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. காயத்திலிருந்து மீண்டுள்ள முகமது ஷமி தற்போது முழு உடல்தகுதியுடன் உள்ளார். ஜஸ்பிரித் பும்ராவும் காயத்திலிருந்து மீண்டுள்ளார். அதேபோல, பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின்போது, பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிய முகமது சிராஜும் தற்போது சிறப்பாக பந்துவீசி வருகிறார்.

ரவி சாஸ்திரி கூறுவதென்ன?

ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி முழு உடல்தகுதியுடன் இருக்கும்பட்சத்தில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஜஸ்பிரித் பும்ரா

இது தொடர்பாக ஐசிசி ரிவ்யூவில் அவர் பேசியதாவது: முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி இவர்கள் மூவரும் முழு உடல் தகுதியுடன் இருந்தால், இங்கிலாந்து அணிக்கு நிறைய பிரச்னைகளை உருவாக்குவார்கள் என நினைக்கிறேன். இவர்கள் மூவரும் முழு உடல்தகுதியுடன் இருக்கும்போது, இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் தரமானதாக இருக்கும்.

இதையும் படிக்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஜோஸ் ஹேசில்வுட் சிறப்பாக செயல்படுவார்: ரவி சாஸ்திரி

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் சேர்க்கப்படாததால் முகமது சிராஜ் மிகுந்த ஏமாற்றமடைந்தார். அதன் பின், அவர் தற்போது பந்துவீசுவதைப் பாருங்கள். அவர் அபாரமாக பந்துவீசி வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள நிலையில், முகமது சிராஜ் சிறப்பாக பந்துவீசுவது இந்திய அணிக்கு பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது. அதேபோல, முகமது ஷமி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இருவரும் காயத்திலிருந்து மீண்டு நன்றாக பந்துவீசி வருகிறார்கள் என்றார்.

முத்தரப்பு கிரிக்கெட்: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய மகளிரணி அபார வெற்றி!

இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய மகளிரணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்க மகளிா் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடா் கொழும்பு பி... மேலும் பார்க்க

இந்திய மகளிரணி சுழலில் வீழ்ந்த இலங்கை..! வெற்றிபெற 148 ரன்கள் இலக்கு!

ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை 50 ஓவா்கள் போட்டி இந்தியாவில் நிகழாண்டு பிற்பகுதியில் நடைபெறவுள்ளது. அதற்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.இதையொட்டி இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்க மகளிா் அணிகள... மேலும் பார்க்க

சென்னையை வீழ்த்தியது ஹைதராபாத்

ஐபிஎல் போட்டியின் 43-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை வெள்ளிக்கிழமை வென்றது. சொந்த மண்ணில் சென்னைக்கு இது 4-ஆவது தோல்வியாகும். இந்த ஆட்டத்தில்... மேலும் பார்க்க

ஐசிசி தொடர்களில் இந்தியா - பாகிஸ்தானை ஒரே குழுவில் சேர்க்க வேண்டாம்! - பிசிசிஐ

ஐசிசி தொடர்களில் இந்தியா - பாகிஸ்தானை ஒரே குழுவில் சேர்க்க வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஜம்மு - காஷ்ம... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட் தோல்வி எதிரொலி: 2-வது டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணியில் மாற்றம்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணியில் இரண்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.ஜிம்பாப்வே அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில... மேலும் பார்க்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஜோஸ் ஹேசில்வுட் சிறப்பாக செயல்படுவார்: ரவி சாஸ்திரி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஜோஸ் ஹேசில்வுட் சிறப்பாக செயல்படுவார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகிற ஜூன் மாத... மேலும் பார்க்க