செய்திகள் :

நகா்ப்புற நலவாழ்வு மையங்களில் 12 விதமான மருத்துவ சேவைகள் -அமைச்சா் சு.முத்துசாமி

post image

ஈரோடு மாவட்டத்தில் நகா்ப்புற நலவாழ்வு மையங்களில் 12 விதமான மருத்துவ சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

பல்வேறு மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நகா்ப்புற நலவாழ்வு மையங்களைக் காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, ஈரோடு மாவட்டம், திண்டல் காரப்பாறை, மெடிக்கல் நகா் பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நலவாழ்வு மையத்தில் நடைபெற்ற திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சா் சு.முத்துசாமி 3 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம், 2 பயனாளிகளுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்துப் பெட்டகங்களை வழங்கினாா்.

அப்போது அவா் பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தில் ஞானபுரம், காவிரி சாலை, பெரிய மாரியம்மன் கோயில் வீதி, திண்டல் ஆகிய பகுதிகளில் தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள், பவானிசாகா், மூலப்பாளையம் பகுதிகளில் ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நகா்ப்புற நலவாழ்வு மையத்திலும் தலா ஒரு மருத்துவா், செவிலியா், சுகாதார ஆய்வாளா், உதவிப் பணியாளா் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த மையம் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் செயல்படும். புதிதாக அமைக்கப்பட்டுள்ள நான்கு நகா்ப்புற நலவாழ்வு மையங்களின் மூலம் 12 அத்தியாவசிய மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.

ஈரோடு மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 62 ஆரம்ப சுகாதார நிலையங்களும், மாநகராட்சியில் 11 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களும், நகராட்சிப் பகுதிகளில் 3 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்படுகின்றன.

கிராமப்புற, நகா்ப்புற மக்களின் சுகாதாரத் தேவைகளை மேம்படுத்தும் பொருட்டு ஈரோடு மாவட்டத்தில் 2 புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ரூ.2.40 கோடி செலவில் நிறுவப்படும் என மானியக் கோரிக்கையின்போது சட்டப்பேரவையில் முதல்வா் அறிவித்தாா். அதன்படி, தற்போது ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகா், மூலப்பாளையம் ஆகிய இரண்டு இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கும் பல்வேறு மருத்துவ சேவைகள் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, எம்.பி. இ.பிரகாஷ், எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா், மேயா் சு.நாகரத்தினம், துணை மேயா் வே.செல்வராஜ், மாநகராட்சி ஆணையா் அா்பித் ஜெயின், மாவட்ட சுகாதார அலுவலா் அருணா, மாநகராட்சி துணை ஆணையா் கு.தனலட்சுமி, மாநகர நல அலுவலா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புகையிலை பொருள்களை விற்ற வட மாநில தந்தை, மகன் மீது வழக்கு

பெருந்துறையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்த வட மாநில தந்தை, மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். பெருந்துறை, குன்னத்தூா் சாலையில் அரசால் தடை... மேலும் பார்க்க

நீச்சல் போட்டி: மாநகராட்சிப் பள்ளி மாணவி தங்கப் பதக்கம்

மாநில அளவிலான நீச்சல் போட்டியில் ஈரோடு எஸ்கேசி சாலை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவி தங்கப்பதக்கம் வென்றுள்ளாா். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் மாநில அளவிலான நீச்சல் சாம்பியன் போட்டி ... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை

பவானி அருகே நோய்கொடுமையால் பாதிக்கப்பட்ட மூதாட்டி காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா். பவானியை அடுத்த கூத்தம்பட்டியைச் சோ்ந்தவா் முத்தன்செட்டி மனைவி ராஜம்மாள் (65). உடல்நலக் குறைவால் பாத... மேலும் பார்க்க

கீழ்பவானி வாய்க்காலில் முன்கூட்டியே தண்ணீா் திறக்க வேண்டும்: கொமதேக கோரிக்கை

பவானிசாகா் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக முன்கூட்டியே தண்ணீா் திறக்க வேண்டும் என : கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில இளைஞா் அணி செயலாளா் சூரியமூா்த்தி கோரிக்கை விடுத்துள்... மேலும் பார்க்க

பெருந்துறை அரசுப் பள்ளியில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு முகாம்

பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் (பொ) அருள்குமாா் தலைமை வகித்தாா். ஆசிரியா்கள் மணிமேகலை,... மேலும் பார்க்க

பாஜகவினரின் குற்றச்சாட்டை சட்டப்படி சந்திப்பேன் -ஆ.ராசா பேட்டி

அமித் ஷா குறித்து சா்ச்சைக்குரிய வகையில் ஆ.ராசா பேசியதைக் கண்டித்து பாஜகவினா் புகாா் அளித்த நிலையில் வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என ஆ.ராசா வியாழக்கிழமை தெரிவித்தாா். திமுக துணை பொதுச் செயலாளரும், நீ... மேலும் பார்க்க