செய்திகள் :

நடிகர் கபில் சர்மாவின் புதிய ஹோட்டலில் காலிஸ்தான் பயங்கரவாதி துப்பாக்கிச் சூடு!

post image

நடிகர் கபில் சர்மாவின் புதிதாகத் திறக்கப்பட்ட ஹோட்டலில் காலிஸ்தான் பயங்கரவாதி துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் பிரபல நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவின் ஹோட்டல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஹோட்டல் திறக்கப்பட்டு சில நாள்கள் ஆன நிலையில், இந்தச் சம்பவத்துக்கு காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்ஜித் சிங் லட்டி பொறுப்பேற்றுள்ளார். இந்தச் சம்பவத்தில் யாரும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

கப்ஸ் கஃபே என்று அழைக்கப்படும் இந்த ஹோட்டல் சில நாள்களுக்கு முன்னதாக கபில் சர்மா மற்றும் அவரது மனைவி ஜின்னி சத்ரத்தால் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் திறக்கப்பட்டது.

காரில் அமர்ந்திருக்கும் ஒருவர், ஹோட்டலின் ஜன்னலில் 9 முறை துப்பாக்கியால் சுடுவது போன்ற காணொளியில் வெளியாகியுள்ளது. இந்த விடியோ புதன்கிழமை இரவு (கனடா நேரப்படி) எடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பான தேசிய புலானாய்வு முகமையின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஹர்ஜித் சிங் லட்டியும் ஒருவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு காவல்துறை மற்றும் தடயவியல் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. இதுதொடர்பான விசாரணை நடந்து வருகிறது. 

விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவரான விகாஸ் பிரபாகர் கொலை வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பால் தேடப்படும் முக்கிய குற்றவாளிகளில் ஹர்ஜித் சிங் லட்டி ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Firing at Kapil Sharma's cafe in Canada, Khalistani terrorist claims responsibility

இதையும் படிக்க :லண்டன் லார்ட்ஸ் திடல் எம்சிசி அருங்காட்சியகத்தில் சச்சின் உருவப்படம் திறப்பு!

ரூ.1.18 கோடி வெகுமதி: சத்தீஸ்கரில் 23 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் 23 நக்சல்கள் இன்று (ஜூலை 12) சரணடைந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் சரணடைந்த நக்சலைட்டுகளில் 11 மூத்த நக்சல்கள் ஆவார். அவர்களில் பெரும்ப... மேலும் பார்க்க

சாலைகளில் ஓடும் படகுகள்.. மத்திய பிரதேசத்தில் கரையைக் கடந்த மந்தாகினி ஆறு

போபால்: மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக, மந்தாகினி ஆறு கரையை கடந்து பாய்ந்ததால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் படகுகள் நீந்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.ராம்கட், ஜான்... மேலும் பார்க்க

தில்லியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது: 8 பேர் காயம்!

வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரு வயதுக் குழந்தை உள்பட 8 பேர் காயமடைந்தனர். சம்பவ நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்து: மேடே அழைப்புக்கு முன் நடந்தது என்ன? இறுதி வினாடிகள்

புது தில்லி: அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்து தொடா்பாக விசாரித்து வரும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) அதன் முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.கடந்த ஜூன் 12ஆம் தேதி, குஜராத் மாநில... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதளுக்கு அளித்த நேர்காணலில் அமை... மேலும் பார்க்க

இன்ஜின் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதா? ஏர் இந்தியா விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!

அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக முதல்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து கடந்த ஜூன் 12-ஆம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் ‘ஏஐ 171’ விமானம், வானில் பறக்கத... மேலும் பார்க்க