தில்லியில் பாஜகவின் ஆதரவு அணியாக செயல்பட்டது காங்கிரஸ்: ராகுலுக்கு மாயாவதி பதிலட...
நடிகர் யோகிபாபு மருதமலையில் சாமி தரிசனம்!
கோவை: பிரபல திரைப்பட காமெடி நடிகர் யோகிபாபு தான் நடிக்க இருக்கும் புதிய இரண்டு படங்களின் கதைக் கோப்புகளை மருதமலை திருக்கோயில் வைத்து சிறப்பு சாமி தரிசனம் செய்தார்.
தமிழ் திரையுலகில் சமீப காலமாக மிக பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் யோகி பாபு.
கோவையின் ஜி.டி நாயுடு வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து வருகின்றனர். அதில் மாதவன் கதாநாயகனாகவும் , யோகிபாபு முக்கிய பாத்திரத்தில் நடிக்க உள்ளார் இதற்கான படபிடிப்பு இன்று முதல் இரண்டு நாள்கள் கோவையில் நடைபெற உள்ளது.
மூச்சுப் பரிசோதனையில் தவறான முடிவு எதிரொலி: ரயில் ஓட்டுநா்கள் குளிா்பானங்கள் பருக தெற்கு ரயில்வே தடை
படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக வந்த யோகிபாபு மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவில் சாமி தரிசனம் செய்தார்.
தான் கொண்டு வந்திருந்த புதிய படப்பிடிப்பில் கதை கோப்புகளை சாமியின் பாதத்தில் வைத்து வணங்கி பெற்றுக் கொண்டார்.
யோகிபாபு கோவைக்கு வரும்போதெல்லாம் மருதமலைக்கு தவறாமல் வந்து சாமி தரிசனம் செய்வது குறிப்பிடத்தக்கது.