நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதா? ஜாமீன் மனு நாளை விசாரணை!
சென்னை: போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகிய இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கான விடை நாளை(ஜூலை 8) தெரிந்துவிடும்.

போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் ஸ்ரீகாந்த் கடந்த ஜூன் 23-ஆம் தேதியும், அதனைத்தொடர்ந்து ஜூன் 26-ஆம் தேதி கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில், மேற்கண்ட இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
Actors Srikanth, Krishna likely to be released on bail? Verdict tomorrow!