செய்திகள் :

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி விழா: பூப்பல்லக்கில் அம்மன் நகர்வலம்; விடிய விடிய பக்தர்கள் தரிசனம்

post image

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா மார்ச் 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நத்தம் பகுதி மட்டுமல்லாது சுற்றுவட்டார மக்கள் உலுப்பகுடி அருகே கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் நீராடி மஞ்சள் ஆடைகள் அணிந்து காப்புக்கட்டி 15 நாள்கள் விரதத்தைத் தொடங்கினர்.

சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன்

கடந்த வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இரவில் மாரியம்மன் மயில், சிம்மம், அன்னம் போன்ற வாகனங்களில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி நகர்வலம் வந்தார். பக்தர்கள் நேர்த்திக் கடனாகப் பால், சந்தனம், தேன் குடங்களை எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். மேலும், மாரியம்மனுக்கு மஞ்சள் திருப்பாவாடை ஊர்வலமாக எடுத்து வந்து காணிக்கையாகச் செலுத்தப்பட்டது.

விழாவில் அம்மனுக்கு அக்னிசட்டி எடுத்தல், அலகு வேல் குத்தி வருதல், பால்குடம், மாறுவேடம் அணிந்து வருதல், மாவிளக்கு, கரும்பு தொட்டில், அரண்மனை பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்கள் செலுத்தப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கப் பக்தர்கள் புனித நீராடிவிட்டு பூக்குழி முன் வரிசையில் வந்து நின்றனர். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பூக்குழி இறங்கும் பக்தர்கள்

நேற்று முன்தினம் அம்மன் மஞ்சள் நீராட்டுதல் நிகழ்ச்சியைத் தொடர்ந்து இரவு பல்வேறு வண்ணப்பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் காமாட்சி அலங்காரத்தில் அம்மன் நகர்வலம் வந்தார். அம்மன் குளத்திலிருந்து புறப்பட்ட பல்லக்கு முக்கிய வீதிகள் வழியாக வந்தது. விடிய விடிய நடந்த இந்நிகழ்வில் வழிநெடுகிலும் மண்டகப்படிகளில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். காந்திநகர் பொதுமக்கள் சார்பில் கழுமரம் ஊன்றப்பட்டு கழுமரம் ஏறும் போட்டி நடத்தப்பட்டது.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவிலில் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை வழிபாடு! | Photo Album

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோயிலில் குழந்தைகள் நலமுடன் வாழவேண்டி மீன பரணி தினமான இன்று தூக்க நேர்ச்சை வழிபாடு நடைபெற்றது. இதில் 1175 குழந்தைகளை நேர்த்திகடனுக்காக சுமார் 40... மேலும் பார்க்க

மதுரையில் ரம்ஜான் பண்டிகை: அரசரடி ஈத்கா மைதானத்தில் சிறப்புத் தொழுகை | Photo Album

ரம்ஜான் சிறப்பு தொழுகைரம்ஜான் சிறப்பு தொழுகைரம்ஜான் சிறப்பு தொழுகைரம்ஜான் சிறப்பு தொழுகைரம்ஜான் சிறப்பு தொழுகைரம்ஜான் சிறப்பு தொழுகைரம்ஜான் சிறப்பு தொழுகைரம்ஜான் சிறப்பு தொழுகைரம்ஜான் சிறப்பு தொழுகைரம... மேலும் பார்க்க

கோம்பை, ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை... தேனியில் நாட்டு இன நாய்கள் கண்காட்சி | Photo Album

நாட்டு இன நாய்கள் கண்காட்சி நாட்டு இன நாய்கள் கண்காட்சி நாட்டு இன நாய்கள் கண்காட்சி நாட்டு இன நாய்கள் கண்காட்சி நாட்டு இன நாய்கள் கண்காட்சி நாட்டு இன நாய்கள் கண்காட்சி நாட்டு இன நாய்கள் கண்காட்சி பாரம... மேலும் பார்க்க

நெல்லை: ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் கோயில் திருக்கல்யாணம்; திரளான பக்தர்கள் சாமி தரிசனம் | Photo Album

திருநெல்வேலி டவுன் ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ சௌந்தரவல்லி ஸ்ரீ கோதைவல்லி தாயாருடன் சுவாமி அருள்பாலிக்கின்றார். இத்திருக்கோயிலில் சுவாமி திருக்கல்யாணம் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்... மேலும் பார்க்க

கச்சத்தீவு திருவிழா: 3 மணி நேரம் அனல் வெயிலில் தவித்த இந்திய பக்தர்கள்... இலங்கை அரசு மெத்தனம்

இலங்கையில் 2009-ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா மீண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இங்குள்ள பழைய ஆலயத்திற்கு பதிலாக இலங்கை அரசு புதிய ஆலயம் ஒன்றை சில ஆண்டு... மேலும் பார்க்க

Holi Festival: அன்பை வண்ணங்களாய் பூசி ஹோலி பண்டிகை கொண்டாட்டம்... மதுரையில் கோலாகலம் | Photo Album

ஹோலி பண்டிகை கொண்டாட்டம் - மதுரை ஹோலி பண்டிகை கொண்டாட்டம் - மதுரை ஹோலி பண்டிகை கொண்டாட்டம் - மதுரை ஹோலி பண்டிகை கொண்டாட்டம் - மதுரை ஹோலி பண்டிகை கொண்டாட்டம் - மதுரை ஹோலி பண்டிகை கொண்டாட்டம் - மதுரை ஹோ... மேலும் பார்க்க