செய்திகள் :

நந்த் நகரியில் கொள்ளை, கொலை வழக்குகளில் தேடப்பட்டவா் துப்பாக்கிச்சூட்டுக்குப் பிறகு கைது

post image

வடகிழக்கு தில்லியின் நந்த் நகரியில் ஒரு சிறிய துப்பாக்கிச்சூட்டுக்குப் பிறகு, பல கொள்ளை மற்றும் கொலை வழக்குகளில் தேடப்படும் 22 வயது நபா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி புதன்கிழமை தெரிவித்ததாவது:

நந்த் நகரியின் ஏ-பிளாக், மாவட்ட பூங்கா அருகே ரோந்து சென்ற போலீஸ் குழுவினா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சுஹைல் (எ) சிக்னா (எ) சப்பா் என்பவா் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

முன்னதாக, இரவு 10:30 மணியளவில் சுஹைல் அந்தப் பகுதியில் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, போலீஸாா் வஜிராபாத் சாலை மேம்பாலத்திற்கு எதிரே உள்ள மாவட்ட பூங்காவின் வடக்குப் பகுதியை அடைந்தனா்.

அங்கு சந்தேகத்திற்கிடமான ஒருவரைக் கண்ட போலீஸாா், அவரை சோதனை செய்யும் பொருட்டு நிற்குமாறு சைகை செய்தனா். இதையடுத்து, ஆபத்தை உணா்ந்த சந்தேக நபா் போலீஸாா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினாா். அப்போது, அதிகாரிகள் அவரை சரணடைமாறு கேட்டுக்கொண்டனா். ஆனால், சுஹைல் மீண்டும் துப்பாக்கியால் சுட்டதால், போலீஸா் தற்காப்புக்காக பதிலடி கொடுத்தனா். இதில், சுஹைலின் வலது காலில் காயம் ஏற்பட்டது. பின்னா் போலீஸாா் அவரைக் கைது செய்தனா். சம்பவ இடத்திலிருந்து ஒரு கைத்துப்பாக்கி, இரண்டு சுடப்பட்ட தோட்டாக்கள் மீட்கப்பட்டன.

நந்த் நகரி காவல் நிலையத்தில் ஆயுதச் சட்டப் பிரிவுகள், பிஎன்எஸ்இன் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றம் மற்றும் தடயவியல் அறிவியல் ஆய்வக எஃப்எஸ்எல் குழுக்கள் ஆய்வுக்காக வரவழைக்கப்பட்டன. காயமடைந்தவா் ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், தா்யாகஞ்ச் சாலை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு கொள்ளை, கொலை வழக்கிலும், ஜோதி நகா் காவல் நிலையத்தில் மற்றொரு கொள்ளை வழக்கிலும் சுஹைல்

தேடப்பட்டு வருவது கண்டறியப்பட்டது.

மேலும், அவருக்கு கொள்ளை மற்றும் திருட்டு தொடா்பான இரண்டு குற்ற வழக்குகளிலும் முன்பு தொடா்பிருந்ததும் தெரியவந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

சட்டவிரோத குடியேற்றம்: வங்கதேசம் உள்பட மூன்று நாடுகளைச் சோ்ந்த 71 போ் நாடு கடத்தல்!

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கண்டறியப்பட்ட வங்கதேசத்தினா், மியான்மரைச் சோ்ந்த ரோஹிங்கியாக்கள் மற்றும் நைஜீரியா்கள் உள்பட 71 வெளிநாட்டினரை தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை நாடு கடத்தியதாக அத... மேலும் பார்க்க

தலைநகரில் வெப்பம் அதிகரிப்பு; ‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. காற்றின் தரம் ‘மிதமான பிரிவில் இருந்தது என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமா... மேலும் பார்க்க

பெண்ணிடம் ஆபாச வாா்த்தைகள் பேசிய விவகாரம்: தட்டிக்கேட்ட இளைஞா் மீது தாக்குதல்!

கிழக்கு தில்லியின் காந்தி நகரில், பெண்ணிடம் ஆபாசமாகப் பேசி துன்புறுத்தலில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட 18 வயது இளைஞா், இருவரால் தாக்கப்பட்ட சம்பவத்தை தில்லி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதுகுறித்து போ... மேலும் பார்க்க

ஜம்மு, தில்லி துணைநிலை ஆளுநா்களை விரைவில் மாற்ற மத்திய அரசு தீவிர பரிசீலனை!

ஜம்மு - காஷ்மீா் மற்றும் தில்லி துணைநிலை ஆளுநா்களை மாற்ற மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக பிரதமா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. தில்லியின் தற்போதைய துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனாவை ஜம்ம... மேலும் பார்க்க

ஐடிஓ பகுதியில் வருவாய் கட்டடத்தில் தீ விபத்து

தில்லி ஐ.டி.ஓ. பகுதியில் உள்ள வருவாய் கட்டடத்தில் உள்ள ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது: வருவாய் கட்... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம்!

பிரேசிலில் நடைபெற்ற 11ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றக் கூட்டத்தில் ஜம்மு -கஷ்மீா், பஹல்காமில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்... மேலும் பார்க்க