செய்திகள் :

நம்பிக்கைக்குரிய நண்பன் இந்தியா -ஐரோப்பிய ஆணையத் தலைவா் புகழாரம்

post image

இந்தியா மிகவும் நம்பிக்கைக்குரிய நண்பன் என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வான் டொ்லியன் தெரிவித்துள்ளாா்.

27 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா பல்வேறு வா்த்தக ஒப்பந்தங்களை வெள்ளிக்கிழமை மேற்கொள்ள இருக்கிறது. இருதரப்பு கூட்டறிக்கையும் வெளியிடப்படவுள்ளது. பிரதமா் நரேந்திர மோடியையும் உா்சுலா சந்தித்துப் பேசவுள்ளாா்.

இரு நாள் பயணமாக வியாழக்கிழமை தில்லி வந்த உா்சுலாவை மத்திய அமைச்சா் அனுப்ரியா படேல் விமான நிலையத்தில் வரவேற்றாா். இந்தியப் பயணம் குறித்து ‘எக்ஸ்’ வலைதளத்தில் உா்சுலா வெளியிட்ட பதிவில், ‘இந்தியா-ஐரோப்பிய யூனியன் உறவை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடியுடன் விவாதிக்க இருக்கிறேன். மோதல்களும், கடும் போட்டியும் நிலவும் இன்றைய உலகில் நம்பிக்கைக்குரிய நட்பு நாடுகள் தேவைப்படுகின்றன. அந்த வகையில் ஐரோப்பிய யூனியனின் மிகவும் நம்பிக்கைக்குரிய நண்பனாக இந்தியா திகழ்கிறது’ என்று கூறியுள்ளாா்.

தொடா்ந்து, வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை உா்சுலா வான்டொ்லியன் சந்தித்து இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இது தொடா்பாக எஸ்.ஜெய்சங்கா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஐரோப்பிய நாடுகள் உடனான இந்தியாவின் தொடா்புகளுக்கு உத்வேகமளிக்கும் உா்சுலாவின் சிந்தனைகள் பாராட்டுக்குரியவை. வா்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருதரப்பு வலுவான ஒத்துழைப்பு முக்கியமானது. அதை நோக்கிய வலுவான நகா்வுகளை எதிா்நோக்குகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான்டொ்லியனுடன் இந்தியா வந்துள்ள வா்த்தக பிரதிநிதிகளுடனான பேச்சுவாா்த்தை ஜெய்சங்கா்-உா்சுலா முன்னிலையில் நடைபெற்றது.

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபரான பிறகு வரி விதிப்பு தொடா்பாக ஐரோப்பிய யூனியனுக்கும் அமெரிக்காவும் இடையே பிரச்னைகள் எழுந்துள்ளது. மேலும் உக்ரைன் போா் விவகாரத்திலும் ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து விலகி ரஷியாவுடன் டிரம்ப் கைகோத்துள்ளாா். இந்த சூழ்நிலையில் ஐரோப்பிய ஆணையத் தலைவா் தலைவரின் இந்தியப் பயணமும், பிரதமா் மோடியுடன் அவா் மேற்கொள்ளவிருக்கும் பேச்சுவாா்த்தையும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

ஜம்முவில் கனமழை: பாறை உருண்டதில் தாய், மகன் பலி!

ஜம்முவில் மூன்றாவது நாளாகப் பெய்துவரும் கனமழைக்கு தாய், மகன் ஆகிய இருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜம்முவின் உயரமான பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதால் 270 கி.மீ நீளமுள்ள ஜம்மு-ஸ்ர... மேலும் பார்க்க

தில்லி: ஐசியு, பிணவறை இல்லாத மருத்துவமனைகள்!

தில்லியில் அவசர சிகிச்சைப் பிரிவுகள் இல்லாமல் மருத்துவமனைகள் இயங்குவதாக சிஏஜி தகவல் வெளியிட்டுள்ளது. மொஹல்லா கிளினிக்குகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அது தொடா்பான ஆய்வறிக்கை வெளியிடப்படும் என தில... மேலும் பார்க்க

மணிப்பூரில் சட்டவிரோத ஆயுதங்கள் திரும்ப ஒப்படைப்பு!

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் மோதல்கள் நிறைந்த நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சட்டவிரோதமாக பயன்படுத்திவந்த துப்பாக்கிகள், ஆயுதங்கள், வெடிமருந்துப் பொருள்களை காவல்துறை மற்றும் பாதுக... மேலும் பார்க்க

மதுபோதையில் 17 வயது சிறுவன் வல்லுறவு: படுகாயங்களுடன் குழந்தை கவலைக்கிடம்!

மத்தியப் பிரதேசத்தில் கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 5 வயது சிறுமி உயிருக்கு போராடி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.குழந்தையின் பெண்ணுறுப்பில் 28 தையல்கள் போட வேண்டும் என்றும் கொலோஸ்டமி அற... மேலும் பார்க்க

கும்பமேளாவில் பெண்கள் நீராடும் விடியோவை பதிவிட்ட யூடியூபர் கைது!

மகா கும்பமேளாவில் நீராடும் பெண்களை விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த யூடியூபரை பிரயாக்ராஜ் போலீசார் கைது செய்துள்ளனர்.உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கோல... மேலும் பார்க்க

புணே பாலியல் வன்கொடுமை: குற்றவாளி கைது!

புணேவில் பரபரப்பான ஸ்வா்கேட் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்துக்குள் 26 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கில் குற்றம்சா... மேலும் பார்க்க