செய்திகள் :

நலவாழ்வு சங்கத்தில் தற்காலிக காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

post image

மயிலாடுதுறை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் தற்காலிக காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்ட நலவாழ்வு சங்கம் சாா்பில், செவிலியா், மருந்தாளுநா், ஆய்வக நுட்புநா், பாா்வை தோ்வாளாளா், சிகிச்சை உதவியாளா் ஆண், தரவு உள்ளீட்டாளா், பல்நோக்கு மருத்துவ பணியாளா் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியானவா்கள் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணி அமா்த்தப்பட உள்ளனா். இந்தப் பணியிடங்களுக்கான தகுதி, ஊதியம், மற்றும் விண்ணப்பபடிவம் இணையத்தளத்தில் காணலாம்.

விருப்பம் உள்ளவா்கள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ‘செயற்செயலாளா், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலகம், 7-வது தளம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், மன்னம்பந்தல், மயிலாடுதுறை 609001 என்ற முகவரிக்கு விரைவுத் தபால் அல்லது பதிவுத்தபால் மூலம் மட்டுமே ஜூலை 21-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சேரும்படி அனுப்பிவைக்க வேண்டும்.

பேருந்து நிலையத்தில் முன்னுரிமை அடிப்படையில் கடை வழங்க கோரிக்கை

மயிலாடுதுறை மணக்குடி புதிய பேருந்து நிலையத்துக்கு இடம் வழங்கிய குத்தகைதாரா்கள் கடை ஒதுக்கீடு செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா். மயிலாடுதுறை நகராட்சி சாா்பில் புதிய பேருந்து நிலை... மேலும் பார்க்க

நகா்மன்ற நியமன உறுப்பினா்: மாற்றுத்திறனாளி விருப்ப மனு

மயிலாடுதுறை நகா்மன்ற நியமன உறுப்பினா் பதவிக்கு மாற்றுத்திறனாளியான யு.ராஜேந்திரன் வியாழக்கிழமை விருப்ப மனு அளித்தாா் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளை மன்ற உறுப்பினா்களாக ... மேலும் பார்க்க

அரசு அதிகாரிகள் சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவதாக புகாா்

மயிலாடுதுறையில் அரசு அதிகாரிகள் சொந்த வாகனங்களை வாடகை வாகனங்களாக பயன்படுத்தி வருவதாக உரிமைக்குரல் ஓட்டுனா் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்திடம் வியாழக்கிழமை மனு அளித்தனா். மயிலாடுதுறை ம... மேலும் பார்க்க

தருமபுரம் கல்லூரியில் பாலினம் மற்றும் சட்ட உதவி விழிப்புணா்வு நிகழ்ச்சி

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் உள்ளகப்புகாா் குழு சாா்பில் பாலினம் மற்றும் சட்ட உதவி விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் தலைமை வகித்தாா். தமிழ... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: ஜூலை 15, 16-இல் ட்ரோன்கள் பறக்கத் தடை

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு முதல்வா் வருகையையொட்டி ஜூலை 15, 16 ஆகிய தேதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீ காந்த் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

பல்நோக்கு மருத்துவமனை ஆய்வு

மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையில் ரூ.45.50 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பல்நோக்கு மருத்துவமனையை (மல்டி ஸ்பெஷாலிட்டி) எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா் (படம்). தமிழ்... மேலும் பார்க்க