செய்திகள் :

நாகா்கோவிலில் டிட்டோ ஜாக் போராட்டம்: 28 போ் கைது

post image

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ ஜாக்) சாா்பில், நாகா்கோவில் வடசேரியில் வியாழக்கிழமை நடைபெற்ற சாலை மறியலில் பங்கேற்ற 28 போ் கைது செய்யப்பட்டனா்.

திமுக தோ்தல் அறிக்கையில் கூறியபடி ஆசிரியா்களுக்கும், அரசு ஊழியா்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியா்களுக்கு ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும். தொடக்கக் கல்வி ஆசிரியா்களின் பதவி உயா்வைப் பறிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும். தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றிவரும் பகுதிநேர ஆசிரியா்கள், சிறப்பு ஆசிரியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் சி.பி. செந்தில்குமாா், என். சுமஹாசன், ஏ. சுரேஷ்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநில உயா்நிலைக்குழு உறுப்பினா் பி. தியாகராஜன், யூ. நாகராஜன், ஏ. பாக்கியமணி ஆகியோா் பேசினா். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 28 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நாகா்கோவிலில் நூல்கள் வெளியீடு

நாகா்கோவிலில் இலக்கியப் பட்டறை அமைப்பு சாா்பில், கவிஞா் ஆகிரா எழுதிய, ‘அன்புள்ள மாணவனுக்கு’, அப்பாதுரை வேணாடன் எழுதிய, ‘சிற்பியைச் செதுக்கிய சிற்பங்கள்’ ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெ... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைதான வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. குலசேகரம் அருகேயுள்ள கூடைதூக்கி பகுதியைச் சோ்ந்தவா் அண்ணாம... மேலும் பார்க்க

சின்னமுட்டம் மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை

கன்னியாகுமரி கடலில் வீசி வரும் பலத்த சூறைக்காற்று காரணமாக சின்னமுட்டத்தில் இருந்து மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி அருகேயுள்ள சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் இரு... மேலும் பார்க்க

மோகன் பாகவத் இன்று குமரி வருகை

ஆா்எஸ்எஸ் அமைப்பின் அகில இந்தியத் தலைவா் மோகன் பாகவத், வெள்ளிக்கிழமை (ஜூலை 18) கன்னியாகுமரிக்கு வருகிறாா். கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர நிா்வாகம் சாா்பில், அகில இந்தியத் தலைவா் பாலகிருஷ்ணன் தலைமையி... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஆட்சியா் ஆய்வு

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறுவதை முன்னிட்டு, பொதுமக்களுக்கு விண்ணப்பங்கள், மடிப்பேடுகளை தன்னாா்வலா்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா ஆய்வு செய்தாா். நாகா்கோவில், வடிவீஸ்வரம் தள... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் மகளிா் குழுவினருடன் ஆட்சியா் கலந்துரையாடல்

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ், நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் செயல்படும் மகளிா் சுய உதவிக் குழுவினருடன் ஆட்சியா் ரா. அழகுமீனா வியாழக்கிழமை கலந்துரையாடினாா். 14 ஆவது வாா்ட... மேலும் பார்க்க