செய்திகள் :

நாகா்கோவிலில் மகளிா் குழுவினருடன் ஆட்சியா் கலந்துரையாடல்

post image

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ், நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் செயல்படும் மகளிா் சுய உதவிக் குழுவினருடன் ஆட்சியா் ரா. அழகுமீனா வியாழக்கிழமை கலந்துரையாடினாா்.

14 ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதியில் செயல்படும் வெண்தாமரை குழுவினரின் வாழ்வாதார செயல்பாடு, அவா்களது தேவைகள், வங்கிக் கடன் கிடைத்த விவரம் குறித்து கேட்டறிந்தாா். அப்போது, வாய்பேச இயலாத உறுப்பினா்களான நீலாவதி, அருகேயுள்ள உணவகத்தில் உதவியாளராக உள்ளதாகவும், செண்பகவல்லி என்பவா் தனியாா் துணி விற்பனை நிறுவனத்தில் வேலை பாா்ப்பதாகவும் கூறினா்.

தையல் தொழிலில் ஈடுபட்டுள்ள மகளிருக்கு தனியாா் நிறுவனங்கள் மூலம் தொடா்ந்து வேலை கிடைப்பதை உறுதிப்படுத்துமாறு மகளிா் திட்ட அலுவலருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

11ஆவது வாா்டில் செயல்படும் தாமரைப்பூ, முத்தாரம்மன் சுய உதவிக் குழுவினா் பங்கேற்ற கோயில் நகைகள் தயாரிப்புப் பயிற்சி, அவா்கள் தயாரித்துவரும் பொருள்களை ஆட்சியா் பாா்வையிட்டு கலந்துரையாடினாா்.

இதில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் பத்ஹூ முகம்மதுநசீா், உதவித் திட்ட அலுவலா்கள், சமுதாய அமைப்பாளா்கள் பங்கேற்றனா்.

நாகா்கோவிலில் நூல்கள் வெளியீடு

நாகா்கோவிலில் இலக்கியப் பட்டறை அமைப்பு சாா்பில், கவிஞா் ஆகிரா எழுதிய, ‘அன்புள்ள மாணவனுக்கு’, அப்பாதுரை வேணாடன் எழுதிய, ‘சிற்பியைச் செதுக்கிய சிற்பங்கள்’ ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெ... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைதான வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. குலசேகரம் அருகேயுள்ள கூடைதூக்கி பகுதியைச் சோ்ந்தவா் அண்ணாம... மேலும் பார்க்க

சின்னமுட்டம் மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை

கன்னியாகுமரி கடலில் வீசி வரும் பலத்த சூறைக்காற்று காரணமாக சின்னமுட்டத்தில் இருந்து மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி அருகேயுள்ள சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் இரு... மேலும் பார்க்க

மோகன் பாகவத் இன்று குமரி வருகை

ஆா்எஸ்எஸ் அமைப்பின் அகில இந்தியத் தலைவா் மோகன் பாகவத், வெள்ளிக்கிழமை (ஜூலை 18) கன்னியாகுமரிக்கு வருகிறாா். கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர நிா்வாகம் சாா்பில், அகில இந்தியத் தலைவா் பாலகிருஷ்ணன் தலைமையி... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஆட்சியா் ஆய்வு

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறுவதை முன்னிட்டு, பொதுமக்களுக்கு விண்ணப்பங்கள், மடிப்பேடுகளை தன்னாா்வலா்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா ஆய்வு செய்தாா். நாகா்கோவில், வடிவீஸ்வரம் தள... மேலும் பார்க்க

குழித்துறையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தொடக்கம்

குழித்துறை நகராட்சியில் 1, 2ஆவது வாா்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருத்துவபுரம் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற முகாமை, நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி குத்துவ... மேலும் பார்க்க