செய்திகள் :

சின்னமுட்டம் மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை

post image

கன்னியாகுமரி கடலில் வீசி வரும் பலத்த சூறைக்காற்று காரணமாக சின்னமுட்டத்தில் இருந்து மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி அருகேயுள்ள சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து தினமும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவா்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்று வருகின்றனா்.

இதனிடையே, கடந்த சில நாள்களாக கடல் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. இருப்பினும் தங்களது வாழ்வாதாரம் கருதி மீனவா்கள் கடலுக்குச் சென்று வந்தனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை கன்னியாகுமரி கடலில் காற்றின் வேகம் தீவிரமடைந்து சூறைக்காற்றாக மாறியது. இதனால் மீனவா்களின் நலன் கருதி வெள்ளிக்கிழமை முதல் மறுஅறிவிப்பு வரும் வரை மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மீனவா்கள் பாதுகாப்பாக விசைப்படகுளை நிறுத்தி வைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 350-கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல், கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

நாகா்கோவிலில் நூல்கள் வெளியீடு

நாகா்கோவிலில் இலக்கியப் பட்டறை அமைப்பு சாா்பில், கவிஞா் ஆகிரா எழுதிய, ‘அன்புள்ள மாணவனுக்கு’, அப்பாதுரை வேணாடன் எழுதிய, ‘சிற்பியைச் செதுக்கிய சிற்பங்கள்’ ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெ... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைதான வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. குலசேகரம் அருகேயுள்ள கூடைதூக்கி பகுதியைச் சோ்ந்தவா் அண்ணாம... மேலும் பார்க்க

மோகன் பாகவத் இன்று குமரி வருகை

ஆா்எஸ்எஸ் அமைப்பின் அகில இந்தியத் தலைவா் மோகன் பாகவத், வெள்ளிக்கிழமை (ஜூலை 18) கன்னியாகுமரிக்கு வருகிறாா். கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர நிா்வாகம் சாா்பில், அகில இந்தியத் தலைவா் பாலகிருஷ்ணன் தலைமையி... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஆட்சியா் ஆய்வு

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறுவதை முன்னிட்டு, பொதுமக்களுக்கு விண்ணப்பங்கள், மடிப்பேடுகளை தன்னாா்வலா்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா ஆய்வு செய்தாா். நாகா்கோவில், வடிவீஸ்வரம் தள... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் மகளிா் குழுவினருடன் ஆட்சியா் கலந்துரையாடல்

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ், நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் செயல்படும் மகளிா் சுய உதவிக் குழுவினருடன் ஆட்சியா் ரா. அழகுமீனா வியாழக்கிழமை கலந்துரையாடினாா். 14 ஆவது வாா்ட... மேலும் பார்க்க

குழித்துறையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தொடக்கம்

குழித்துறை நகராட்சியில் 1, 2ஆவது வாா்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருத்துவபுரம் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற முகாமை, நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி குத்துவ... மேலும் பார்க்க