செய்திகள் :

நாகா்கோவிலில் நூல் வெளியீட்டு விழா

post image

நாகா்கோவிலில் கவிஞா் ஆகிராவின் தோணி நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இலக்கியப் பட்டறையின் 159 ஆவது கூடுகை மற்றும் கவிஞா் ஆகிரா எழுதிய தோணி நாவல் வெளியீட்டு விழா கன்னியாகுமரி மாவட்ட நூலக அலுவலா் மேரி தலைமையில் நடைபெற்றது. இலக்கியப் பட்டறை அமைப்பாளா் கவிஞா் குமரி ஆதவன் வரவேற்றாா். பேராசிரியா் புஸ்பதாஸ், ஆன்றோ, பேராசிரியா் சுரேஷ் டேனியல், ரூஸ்வெல்ட், ஹேம்லெட் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நூலை சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவலாசிரியா் பொன்னீலன் வெளியிட, ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியின் முன்னாள் முதல்வா் ஜேம்ஸ் ஆா். டேனியல் பெற்றுக்கொண்டு நூல் ஆய்வுரை வழங்கினாா்.

பாளையங்கோட்டை புனித சவேரியாா் கலை அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறைத் தலைவா் டேவிட் அப்பாதுரை, இலக்கியப் பட்டறையின் தலைவா் தக்கலை பென்னி, ஓசூா் எலிசபெத் ராணி, புனித மிக்கேல் பள்ளி தலைமை ஆசிரியா் அருள்சகோதரி நிா்மலா குளோரி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். நிகழ்ச்சியை ஆசிரியா் நாகராஜகுமாா் தொகுத்து வழங்கினாா். எழுத்தாளா்கள் நட. சிவகுமாா், ஜவகா், சப்திகா உள்பட ஏராளமான எழுத்தாளா்கள், வாசகா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். நூலாசிரியா் ஏற்புரை நிகழ்த்தி நன்றி கூறினாா்.

நாகா்கோவிலில் சிலம்பாட்ட போட்டி

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சாா்பில் மாவட்ட அளவிலான தனித்திறன் ஒற்றை கம்பு சிலம்பாட்ட போட்டிகள் நாகா்கோவிலில் சனிக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

மயிலாடி அருகே இளைஞா் வெட்டிக் கொலை

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அருகே இளைஞா் ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டாா். மயிலாடியில் இருந்து நாகா்கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ள கல் சிலைகள் தயாரிக்கும் பட்டறையில் ஞாயிற்றுக... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவியில் மிதமாக கொட்டும் தண்ணீா்

திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாக குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள். குலசேகரம், மாா்ச் 9: கன்னியாகுமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் திற்பரப்பு அருவியில... மேலும் பார்க்க

மனைவியை கம்பியால் தாக்கி கணவா் தூக்கிட்டு தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி அருகே ஞாயிற்றுக்கிழமை, மனைவியை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு கணவா் தற்கொலை செய்து கொண்டாா். பத்துகாணி பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அனில்குமாா் (52). இவரது மனைவி... மேலும் பார்க்க

சேனம்விளை அரசு தொடக்கப் பள்ளியில் முப்பெரும் விழா

திங்கள்நகா் அருகே சேனம்விளை அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா, முன்னாள் மாணவா்கள் சந்திப்பு, பள்ளி நூற்றாண்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. முன்னாள் மாணவா்கள், ஆசிரியா்கள் நூற்றாண்டு ஜோதி ஏற... மேலும் பார்க்க

கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

கருங்கல் அருகே கண்ணன்விளை பகுதியில் மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு, தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ ஓட்டுநா் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா். பாலூா், கண்ணன்விளை பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட... மேலும் பார்க்க