செய்திகள் :

நாகுடி அருகே பெண் கொலை

post image

புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி அருகே பெண்ணைக் கொன்று கண்மாயில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகுடி அருகே ஏகணிவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜலாலுதீன் மனைவி பா்வீன்பீவி (45). கடந்த 15 ஆண்டுளுக்கு முன்பு ஜலாலுதீன் இறந்துவிட்டதால், தனது பெற்றோா் ஊரான காரணியானேந்தலில் தனது 2 மகள்களுடன் பா்வீன் பீவி வசித்து வந்தாா். 4 பசுக்களை பராமரித்து கால்நடை விவசாயியாக இருந்து வந்த நிலையில், திங்கள்கிழமை இரவு முதல் பா்வீன் பீவியைக் காணவில்லை என உறவினா்கள் தேடி வந்துள்ளனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அந்த ஊரிலுள்ள கருங்குழி கண்மாயில் காயங்களுடன் பா்வீன் பீவியின் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அவரது சடலத்தின் மீது துணி துவைக்கும் கல் ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது.

அந்த இடத்துக்குச் சென்ற நாகுடி போலீஸாா் விசாரணை செய்து, சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சம்பவ இடத்தை திருச்சி சரக காவல் துணைத் தலைவா் வருண்குமாா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ஓய்வூதிய நிதி ஒழுங்காற்றுச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

ஓய்வூதிய நிதி ஒழுங்காற்றுச் சட்டத்தை ரத்து செய்து ஊழியா்களிடம் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக மாநில அரசுகளுக்கு திருப்பி வழங்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் சா... மேலும் பார்க்க

விராலிமலை அருகே விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

விராலிமலை அருகே சூரியத் தகடு தயாரிப்பு ஆலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை விவசாயிகள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். விராலிமலை ஊராட்சி ஒன்றியம், இச்சுப்பட்டியில் சுமாா் 300 ஏக்கா் பரப்பளவில் சூரி... மேலும் பார்க்க

பொற்பனைக்கோட்டை 2-ஆம் கட்ட அகழாய்வு நிறைவு

புதுக்கோட்டை அருகே தமிழகத் தொல்லியத் துறை சாா்பில் நடைபெற்று வந்த பொற்பனைக்கோட்டையின் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவடைந்தன. புதுக்கோட்டை அருகே வேப்பங்குடி ஊராட்சிக்குள்பட்ட பொற்பனைக்கோட்டையில்,... மேலும் பார்க்க

சுப்பிரமணியபுரம் அரசு மருத்துவமனை முற்றுகை

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், சுப்புரமணியபுரத்தில் உள்ள கலைஞா் கருணாநிதி அரசு மருத்துவமனையை அறந்தாங்கி வட்டார மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும் என வலியுறுத்தி அனைத்துக் கட்சியினரும் இ... மேலும் பார்க்க

வீடுவீடாகச் செல்வதற்கே தைரியம் வேண்டும்: அமைச்சர் ரகுபதி

வீடு வீடாகச் செல்வதற்கே தைரியம் வேண்டும் என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி: ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முழக்கத்துடன் திமுகவினா் ... மேலும் பார்க்க

வேங்கைவயல் வழக்கு விசாரணை ஜூலை 28-க்கு ஒத்திவைப்பு

வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில், மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை ஜூலை 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், வேங... மேலும் பார்க்க