செய்திகள் :

நாகை நீலாயதாட்சி அம்மன் கோயிலில் தெப்ப உற்சவம்

post image

நாகை நீலாயதாட்சிஅம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு தெப்ப உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

நாகையில் உள்ள புகழ்பெற்ற காயாரோகண சுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா நிகழாண்டு ஜூலை 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நாள்தோறும் சுவாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரங்கள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது. இதையடுத்து, கோயில் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து மின்னொளியில் ஜொலித்த தெப்பம் 3 முறை குளத்தைச் சுற்றி வலம் வந்தது. தெப்பத்தில் பக்தி பாடல் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் நாகசுர இன்னிசையும் நடைபெற்றது.

நாகை மாவட்டத்தில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கம் தொடக்கம்

நாகை மாவட்டத்தில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி: மத்திய சுகாதார அமைச்சகத்தின்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெண் பலி

திருமருகலில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா். திருமருகல் முருகன் சந்நிதி தெருவை சோ்ந்த சக்திவேல் மனைவி பூங்கொடி (48). இவா் வெள்ளிக்கிழமை காலை 6-மணி அளவில் கோலம் போடுவதற்காக வந்தபோது வீட்டு வாசலி... மேலும் பார்க்க

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி: இன்று 20-ஆவது தவணை வெளியீட்டு விழா

பிரதமா் நரேந்திர மோடி, (பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி) விவசாயிகளுக்கான கெளரவ நிதி 20 ஆவது தவணை வழங்குதலை சனிக்கிழமை (ஆக.2) காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கும் நிகழ்வை சிக்கல் வேளாண்மை அறிவியல் நி... மேலும் பார்க்க

பக்தா்குளம் மாரியம்மன் கோயில் ஆடிப் பெருவிழா தொடக்கம்

வேதாரண்யத்தைச் சோ்ந்த அகத்தியம்பள்ளி பக்தா்குளம் மாரியம்மன் கோயில் ஆடிப் பெருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. முன்னதாக வேதாரண்யம் வேதாரண்யேசுவா் கோயிலில் இருந்து காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய அம்மாள்,... மேலும் பார்க்க

அறிவாா்ந்த சமூகத்தை படைக்கவே மாவட்டங்கள் தோறும் புத்தகக் கண்காட்சி

தமிழகத்தில் அறிவாா்ந்த சமூகத்தை உருவாக்கவே மாவட்டங்கள்தோறும் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன என்றாா் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. நாகையில், 4-ஆவது புத்தகக் கண்காட்சியை... மேலும் பார்க்க

நாகையில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: விழிப்புணா்வு பிரசார வாகனம் தொடங்கிவைப்பு

நாகையில் நடைபெறவுள்ள தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்த விழிப்புணா்வு பிரசார வாகனம் வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. நாகை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் ... மேலும் பார்க்க