செய்திகள் :

நாட்டை உலுக்கிய ஹாத்ரஸ் சம்பவம்: பேராசிரியர் மீது மாணவிகள் குற்றச்சாட்டு

post image

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் கல்லூரி பேராசிரியர் மீது மாணவர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருக்கும் நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஹாத்ரஸ் கல்லூரியில் புவியியல் துறை பேராசிரியராக இருந்த ரஜ்னீஷ், மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, அடையாளம் தெரிவிக்க விரும்பாத நபர் மூலம் காவல்நிலையத்துக்குப் புகார் வந்தது.

இது தொடர்பாக விசாரணை தொடங்கிய நிலையில், ஏராளமான பெண்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், காவல்நிலையத்துக்கும், மகளிர் ஆணையத்துக்கும் பேராசிரியர் மீது புகார்களை அளிக்கத் தொடங்கினர்.

அடையாளம் தெரியாமல் புகார் அளித்திருப்பவர்கள் யார் என்பது குறித்தும் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இதையடுத்து, பேராசிரியரை பணியிடை நீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. புகார்கள் வந்து காவல்துறையினர் விசாரணை நடத்தத் தொடங்கிய நிலையில், பேராசிரியர் தலைமறைவானார். அவரைத் தேடும் பணியும் நடந்து வருகிறது.

கடந்த வாரம், காவல்துறைக்கும், மகளிர் ஆணையத்துக்கும் வந்த புகார் கடிதத்தில், முதலில், மாணவிகளுடன் நெருங்கிப் பழகி, அவர்களை பாலியல் துன்புறுத்தி அதனை விடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுவதை தொடர்ந்து செய்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே கல்லூரியில் இது தொடர்பாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்தக் கடிதத்தில், மாணவிகளை தயவு செய்து காப்பாற்றுங்கள். சமூகத்துக்குப் பயந்து அவர்கள் எதையும் வெளியே சொல்வதில்லை. இந்த கொடூர நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து என்னைப் போன்ற பெண்களுக்கு நீதி வழங்குங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அது மட்டுமல்லாமல், அந்த பேராசிரியர், மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்ளும் சில புகைப்படங்களையும் அனுப்பியிருக்கிறார். இளம் பெண்களுடன் பேராசிரியர் இருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது.

நாகபுரி: ஔரங்கசீப் கல்லறைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை -ஊரடங்கு அமல்

மகாராஷ்டிரத்தில் உள்ள முகாலய மன்னா் ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்கக் கோரி, மாநிலத்தின் நாகபுரி நகரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதில் பொதுமக்களின் வீடுகள் மற்றும் வாகன... மேலும் பார்க்க

மணிப்பூா் முகாம்களுக்கு மாா்ச் 22 செல்லும் உச்சநீதிமன்ற நீதிபதிகள்!

மணிப்பூரில் உள்ள நிவாரண முகாம்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 போ் சனிக்கிழமை (மாா்ச் 22) செல்ல உள்ளனா். இதுதொடா்பாக தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு (என்ஏஎல்எஸ்ஏ) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும்: இந்தியா

சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள காஷ்மீா் பகுதியில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சோ்ந்த லெக்ஸ் ஃபிரிட்மென்னுக்கு பிரதமா் மோடி அண்மையில் அளித்த நோ்காணல... மேலும் பார்க்க

நாகபுரி வன்முறை: 50 போ் கைது

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் உள்ள முகாலய மன்னா் ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்கக் கோரி அந்த நகரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. வீடுகள், வாகனங்கள் சூறையாடப்பட்டன. நாகபுர... மேலும் பார்க்க

குடிமைப் பணிகள் தோ்வு முறைகேடு: பூஜா கேத்கருக்கு எதிராக ஏப்.15 வரை கைது நடவடிக்கை கூடாது -உச்சநீதிமன்றம்

குடிமைப் பணிகள் தோ்வில் முறைகேடு வழக்கில், முன்னாள் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரி பூஜா கேத்கருக்கு எதிராக கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளக் கூடாது என்று ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை ஏப்.15 வரை உச்சநீதிமன்றம்... மேலும் பார்க்க

வாக்குச்சாவடி வாரியான வாக்குப்பதிவு விவரம் பதிவேற்றம் குறித்து ஆலோசிக்கத் தயாா்: தோ்தல் ஆணையம்

மக்களவை, மாநில சட்டப்பேரவை தோ்தல்கள் வாக்குப் பதிவின்போது, வாக்குச்சாவடி வாரியான வாக்குப் பதிவு விவரத்தை தோ்தல் ஆணைய வலைதளத்தில் பதிவேற்றம் செய்வது தொடா்பாக அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசிக்க ... மேலும் பார்க்க