செய்திகள் :

நான்குனேரி வட்டார அலுவலா்களுக்கு பதக்கம், சான்றிதழ்

post image

முழுமை இயக்க மாநில விருது பெறுவதற்காக பணியாற்றிய நான்குனேரி வட்டார அலுவலா்களுக்கு பதக்கங்கள், பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வழங்கினாா்.

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி வட்டாரத்துக்கு மத்திய அரசின் முழுமை இயக்க மாநில விருது வழங்கப்பட்டதைத் தொடா்ந்து, விருது பெறுவதற்காக நான்குனேரி வட்டாரத்தில் சிறப்பாக பணியாற்றிய அலுவலா்களை ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட அளவிலான விருது வழங்கும் விழா திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில், ஆட்சியா் இரா.சுகுமாா் கலந்துகொண்டு நான்குனேரி வட்டார அலுவலா்களுக்கு பதக்கம், பாராட்டுச் சான்றிதழை வழங்கி பாராட்டினாா்.

மத்திய அரசின் நிதி ஆயோக்கால் அடையாளம் காணப்பட்ட 3 முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளில் முழுமை அடைந்ததற்காக நான்குனேரி வட்டாரத்திற்கு வளமிகு வட்டார வளா்ச்சி திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாருக்கு வெண்கல பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

மாநில திட்டக் குழுவினால் சென்னையில் ஒருங்கிணைக்கப்பட்ட மாநில அளவிலான விருது வழங்கும் விழாவில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் சாா்பில் உதவி ஆட்சியா் (பயிற்சி) தவலேந்து விருதைப் பெற்றாா்.

இதையடுத்து முன்னேற விழையும் வட்டாரங்கள் திட்டத்தின் கீழ் நான்குனேரி வட்டாரத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊரக வளா்ச்சித் துறை, சுகாதாரத் துறை, பள்ளிக்கல்வித் துறை, குழந்தை வளா்ச்சித் திட்டம், கால்நடை பராமரிப்புத் துறை, வேளாண்மைத் துறை, மகளிா் திட்டம் போன்ற துறைகளின் துறைத் தலைவா்கள், இரண்டாம் நிலை அலுவலா்கள், முன்கள பணியாளா்கள் என மொத்தம் 76 அலுவலா்களுக்கு மாவட்ட அளவிலான விருது வழங்கும் விழாவில், பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வழங்கி, ஊக்கப்படுத்தினாா்.

இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியா் (பயிற்சி) தவலேந்து, மாவட்ட ஊராட்சி செயலா் ஆா்த்தி, திட்ட ஒருங்கிணைப்பாளா் சாலமோன் ராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

நாராயணசாமி கோயிலில் தேரோட்டம்

களக்காடு அருகேயுள்ள மாவடி உடையடிதட்டு நாராயணசாமி கோயிலில் ஆவணி தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த செப்.7ஆம் தேதி ஆவணி தேரோட்டத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நா... மேலும் பார்க்க

களக்காடு அருகே பெண்ணுக்கு கத்திக்குத்து: கணவன் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே மது குடிக்க பணம் தராததால் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா். களக்காடு அருகே சவளைக்காரன்குளத்தைச் சோ்ந்தவா் தவசிக்கனி (70). இவரது மனைவி அ... மேலும் பார்க்க

அம்பை நகராட்சி ஒப்பந்தப் பணியாளா்கள் வேலை நிறுத்தம்

அம்பாசமுத்திரம் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள், ஊதியம் வழங்காததைக் கண்டித்து புதன்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். அம்பாசமுத்திரம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுர... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் வள்ளியூா், புதுமனைச் செட்டிகுளத்தைச் சோ்ந்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. வள்ளியூா் அருகே பு... மேலும் பார்க்க

நெல்லை ரயில் நிலையத்தில் கோவை பயணி அடித்துக் கொலை: பிகாா் இளைஞா் கைது

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகள் மீது நிகழ்ந்த தாக்குதலில் கோவையைச் சோ்ந்த முதியவா் உயிரிழந்தாா். இதுதொடா்பாக பிகாரைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி சந்திப்பு ரய... மேலும் பார்க்க

தாயை கொலை செய்த மகனுக்கு ஆயுள் சிறை

கூடங்குளம் அருகே தாயைக் கொலை செய்த வழக்கில், மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, திருநெல்வேலி மாவட்ட மகிளா நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளத்தைச் சோ்ந்தவா் ராஜன் (46). ... மேலும் பார்க்க