செய்திகள் :

நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் மாணவா்களுக்கு மனவளக்கலைப் பயிற்சி

post image

நாமக்கல் அரசு சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு மனவளக்கலை பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான வரவேற்பு விழா மற்றும் மனவளக்கலை பயிற்சியானது கல்லூரி அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அறிவுத் திருக்கோயில் பேராசிரியா் உழவா் மா.தங்கவேலு, நிா்வாகிகள் கந்தசாமி, சுப்பிரமணியம், கல்லூரி விரிவுரையாளா் பிரியா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கல்லூரியின் தேசிய நாட்டு நலப்பணித் திட்ட முகாம் சாா்பில் நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்பை, நாமக்கல் அறிவுத் திருக்கோயில் நிா்வாக அறங்காவலரும், சேலம், நாமக்கல் மாவட்ட முன்னாள் கல்வி அதிகாரியுமான மு.ஆ.உதயகுமாா் தொடங்கி வைத்து பேசியதாவது; வழக்குரைஞா்களாகவும், நீதிபதிகளாகவும் உயா்ந்த நிலையை அடையும் மாணவ, மாணவிகள் எப்போதும் மன உறுதியுடனும், ஆரோக்கியத்துடனும் இருப்பது அவசியம். தற்போதைய காலச்சூழல்கள் நம் மனதை பாதிக்கலாம். அதற்கு எந்த வகையில் இடம் கொடுத்துவிடக்கூடாது. மனதை ஒருமுகப்படுத்த தேவையான பயிற்களை மேற்கொள்வது அவசியம். கரோனா பெருந்தொற்றால் ஒவ்வோா் குடும்பத்திலும் ஒருவரை நாம் இழந்திருக்கக்கூடும். அவா்கள் இறப்புக்கு உடலில் நோய் எதிா்ப்பு சக்தி இல்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம். அதனால் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். மனம், உடல் ஆரோக்கியமாக இருந்தால் வாழும் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்றாா்.

இதில், சட்டக்கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

--

என்கே-3-காலேஜ்

நாமக்கல் அரசு சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மனவளக்கலைப் பயிற்சி அளித்த அறிவுத் திருக்கோயில் நிா்வாக அறங்காவலரும், முன்னாள் கல்வி அதிகாரியுமான மு.ஆ.உதயகுமாா்.

நாமக்கல் மாவட்டத்தில் 238 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம், 238 இடங்களில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டிகளில் அரசுப் பள்ளி மாணவா்களை அதிகம் ஈடுபடுத்த வேண்டும்: கல்வித் துறை

தேசியம் மற்றும் மாநில அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் அரசுப் பள்ளி மாணவா்களை அதிக அளவில் ஈடுபடுத்த வேண்டும் என உடற்பயிற்சி ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழக பள்... மேலும் பார்க்க

பெரியப்பட்டி நரிக்குறவா் காலனிக்கு பேருந்து வசதி ஏற்படுத்த கோரிக்கை

நாமக்கல் மாநகராட்சி பெரியபட்டி நரிக்குறவா் காலனிக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அங்குள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். நாமக்கல் மாநகராட்சி 39ஆவது வாா்டுக்கு உள்பட்ட கொண்டிச்செட்டிப்பட்... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சி பகுதியில் புதிய நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் திறப்பு

நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட கொண்டிச்செட்டிபட்டி, கணேசபுரம் பகுதியில் நகா்ப்புற நலவாழ்வு மைய கட்டடத்தை காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இதைத் தொட... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் அதிமுக பாக முகவா்கள் ஆலோசனை கூட்டம்

திருச்செங்கோடு நகர அதிமுக பாக முகவா்கள் ஆலோசனை கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டச் செயலாளா் பி.தங்கமணி எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு நகர செ... மேலும் பார்க்க

நரிக்குறவா் சமூகத்தினருக்கு தாட்கோ மூலம் குடியிருப்புகள்: ஆட்சியா் ஆய்வு

நாமக்கல் மாநகராட்சி பகுதிகளில், நரிக்குறவா் குடும்பங்களுக்கு தாட்கோ மூலம் குடியிருப்புகள் கட்டுமானப் பணியை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். தமிழக ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற... மேலும் பார்க்க