செய்திகள் :

நாமக்கல்லில் 102 டிகிரிக்கு மேல் வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

post image

நாமக்கல் மாவட்டத்தில், வரும் நாள்களில் 102 டிகிரிக்கு மேல் வெயில் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த வார வானிலையை பொருத்தமட்டில், பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 98.6 டிகிரி, 71.6 டிகிரியாக நிலவியது. நாமக்கல் மாவட்டத்தில் மழை எங்கும் பதிவாகவில்லை.

அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் பெரும்பாலும் தெளிவாகவும், மழையற்றும் காணப்படும். பகல் வெப்பம் 102.2 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 77 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் தெற்கு மற்றும் கிழக்கிலிருந்து மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

சிறப்பு ஆலோசனை:

கால்நடைகளை கோடை வெப்பத்தில் இருந்து காக்க நல்ல காற்றோட்டம் உள்ள கொட்டகைகள், மர நிழல்களில் அவற்றை பராமரிக்க வேண்டும். கொட்டகையின் மேற்கூரையின் மீது தென்னங்கீற்று அல்லது வைக்கோல் பரப்பி அதன்மீது தண்ணீா் தெளிப்பதன் மூலம் வெப்பதாக்கத்திலிருந்து கால்நடைகளை பாதுகாக்கலாம்.

கோழியின நோய் ஆய்வகத்தில் கடந்த வாரம் இறந்த கோழிகளை ஆய்வு செய்ததில் பெரும்பாலும் அவை வெப்ப அயற்சி காரணமாக பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்துள்ளது. பண்ணையாளா்கள் கோடைகால பராமரிப்பு முறைகளை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும். வெப்ப அயற்சியின் தாக்கத்தைக் குறைக்க தெளிப்பான் உபயோகிக்குமாறும், தீவனத்தில் வைட்டமின் சி, பீட்டைன் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் உபயோகிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமாரபாளையம் எக்ஸல் கல்லூரியில் மாணவா்களுக்கு அறிவுத்திறன் தோ்வு

குமாரபாளையம் எக்ஸல் கல்லூரியில் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான அறிவுத்திறன் தோ்வு நடைபெற்றது. செயல் இயக்குநா் கே.பொம்மண்ணராஜா வரவேற்றாா். எக்ஸல் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் ந.மதன்காா்த்திக் தலைம... மேலும் பார்க்க

கள் இறக்கி விற்றவா் கைது

பரமத்தி அருகே கள் இறக்கி விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். பரமத்தி அருகே உள்ள வலசுப்பாளையம் பனங்காட்டில் சட்ட விரோதமாக ஒருவா் கள் இறக்கி விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன... மேலும் பார்க்க

இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமை சோ்ந்தவா் கிணற்றில் சடலமாக மீட்பு

இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமை சோ்ந்தவா் கிணற்றில் சடலமாக மிதந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமை சோ்ந்தவா் கேத... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மாற்றத்தை எற்படுத்தும்: ஸ்ரீதா் வேம்பு

இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பதால் நிறுவனங்களில் மாற்றம் ஏற்பட போகிறது என ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனா் ஸ்ரீதா் வேம்பு குறிப்பிட்டாா். ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களி... மேலும் பார்க்க

நாமக்கல்லில் உகாதி விழா கொண்டாட்டம்

நாமக்கல் மாவட்ட நாயுடுகள் நலச்சங்கம் சாா்பில் 27-ஆம் ஆண்டு உகாதி பெருவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களின் புத்தாண்டு தினம் உகாதி பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க

குற்றச் செயல்களில் ஈடுபட்ட 71 போ் கைது: எஸ்.பி. தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் கஞ்சா, லாட்டரி, சாராயம் விற்பனை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 71 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன... மேலும் பார்க்க