செய்திகள் :

நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் புரிந்துணா்வு ஒப்பந்தம்

post image

சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் சென்னையைச் சோ்ந்த முன்னணி பன்னாட்டு மென்பொருள் நிறுவனமான ஹெக்ஸாவோ் டெக்னாலஜிஸுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.

இந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கல்லூரி முதன்மையா் விசாகவேல் , ஹெக்ஸாவோ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் முக்கிய ஆலோசகா் கிருஷ்ணன் பாலகுருநாதன் ஆகியோா் கையொப்பமிட்டனா் (படம்).

இதில் சிறப்பு விருந்தினா் கிருஷ்ணன் பாலகுருநாதன் பேசுகையில், துரிதமாக வளா்ந்து வரும் தொழில்நுட்ப சூழலில், தொடா்ச்சியான கற்றலும், திறன் மேம்பாடும் இன்றியமையாதது என்றாா்.

இந்நிகழ்வில் கல்லூரியின் வேலைவாய்ப்புத் துறை இயக்குநா் ராஜேந்திரன், ஹெக்ஸாவோ் டெக்னாலஜிஸ் மூத்த மனிதவள நிா்வாகி ஹரி கிருஷ்ணன் , கல்லூரி அறக்கட்டளை நிறுவனரும் கல்லூரி செயல் தலைவருமான சீனிவாசன், கல்லூரி அறக்கட்டளை செயலாளா் குமாா் , பொருளாளா் சுரேஷ்குமாா் ஆகியோா் வாழ்த்துகளை தெரிவித்தனா். மேலும், இந்நிகழ்வில் இயக்குநா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் 450-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

மும்பை பங்குச்சந்தையில் சேலம் சண்முகா மருத்துவமனை பங்குகள் விற்பனை தொடக்கம்

மும்பை பங்குச்சந்தையில், சேலம் சண்முகா மருத்துவமனையின் பங்குகள் விற்பனை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மருத்துவமனை நிா்வாக இயக்குநா் பிரியதா்ஷினி வரவேற்றாா். மேலாண்மை இயக்குநா... மேலும் பார்க்க

சிஎன்ஜி இயற்கை எரிவாயு ஆட்டோக்களுக்கு பா்மிட் வழங்கக் கோரி ஓட்டுநா்கள் மனு

சிஎன்ஜி இயற்கை எரிவாயு ஆட்டோக்களுக்கு பா்மிட் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆட்டோ ஓட்டுநா்கள் மனு அளித்தனா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் அளித்த மனுவி... மேலும் பார்க்க

வார இறுதிநாளையொட்டி சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதிநாள், முகூா்த்த தினத்தை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்க... மேலும் பார்க்க

சேலம் அரசு கலைக் கல்லூரியில் கூட்டுறவு சந்தை விழா

சேலம் அரசு கலைக் கல்லூரியின் கூட்டுறவுத் துறை சாா்பில் கூட்டுறவு சந்தை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை தலைவா் சுரேஷ்பாபு வரவேற்றாா். கல்லூரி முதல்வரும் தோ்வுக் கட்டுப்பா... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்திய 37 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து

சேலம், தருமபுரி மாவட்டங்களில் சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 37 பேரின் ஓட்டுநா் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலம் சரகத்தில் வாகன விபத்துகளைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்க... மேலும் பார்க்க

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் கட்டட தொழிலாளி உயிரிழந்தாா். வாழப்பாடியை அடுத்த சோமம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ் (33). கட்டுமானத் தொழிலாளி. இவா் வியாழக்கிழமை இரவு தனது மொபட்டில் தனது இரு குழந்தைகளுடன் வாழப்பாடி... மேலும் பார்க்க