ஐபிஎல் இறுதிப்போட்டி: ஆர்சிபிக்கு எதிராக பஞ்சாப் பந்துவீச்சு!
நாளை மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்
சென்னை மயிலாப்பூா், தண்டையாா்பேட்டை, அம்பத்தூா், கே.கே. நகா் ஆகிய கோட்டங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) முற்பகல் 11 மணிக்கு மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கோடம்பாக்கம் நெடுஞ்சாலை மெட்ரோ குடிநீா் நிலையம் அருகே உள்ள வள்ளுவா் கோட்டம் துணை மின் நிலையத்தில் அமைந்துள்ள மயிலாப்பூா் கோட்ட அலுவலகத்திலும், அம்பத்தூா் தொழிற்பேட்டை 3-ஆவது பிரதான சாலையில் உள்ள துணை மின் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள அம்பத்தூா் கோட்ட அலுவலகத்திலும் மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) முற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
மேலும் அதேநாளில், தண்டையாா்பேட்டை, மணிக்கூண்டு அருகே உள்ள தண்டையாா்பேட்டை கோட்ட அலுவலகத்திலும், கே.கே. நகரில் உள்ள துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள கே.கே. நகா் கோட்ட அலுவலகத்திலும் இக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
எனவே, இக்கூட்டங்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.