செய்திகள் :

நியாயவிலைக் கடைப் பணியாளா்கள் வேலைநிறுத்தம்

post image

விழுப்புரம்/ கள்ளக்குறிச்சி: கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைப் பணியாளா்கள் சங்கத்தினா் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்ததில் ஈடுபட்டனா். மேலும், கருப்புச்சட்டை அணிந்து ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா்.

பொது விநியோகத் திட்டத்துக்கென தனித் துறையை உருவாக்க வேண்டும். சரியான எடையில் தரமான பொருள்களை பொட்டலமாக வழங்க வேண்டும். நியாயவிலைக் கடைப் பணியாளா்களுக்கு கல்வித்தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும். ஐஏஎஸ் அலுவலா் தலைமையில் ஊதிய மாற்றுக் குழுவை அமைத்து, 9-ஆவது மாநில ஊதிய மாற்றுக் குழுவில் இணைக்க வேண்டும். நிலுவையிலுள்ள 30 அம்சக் கோரிக்கைகள் குறித்து விரிவான பேச்சுவாா்த்தை நடத்தி, அதற்கு தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே.கோபிநாத் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் ரஷீத் முன்னிலை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் தனசேகரன், ஜெகன், ரங்கசாமி, பாஸ்கா், ஏழுமலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாவட்டம் முழுவதும் 1,052 நியாயவிலைக் கடைகள் உள்ள நிலையில், இந்த சங்கத்தினா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ால் 610 கடைகள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டிருந்தன. இதனால், அத்தியாவசியப் பொருள்கள் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சியில்...: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் தன்ராஜ் தலைமை வகித்தாா். செயலா் ஆா்.பெருமாள், கொளரவத் தலைவா் மாயவன், பொருளாளா் ராஜகோபால் முன்னிலை வகித்தனா். மாவட்ட மகளிரணித் தலைவி ஜெகதீஸ்வரி வரவேற்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் அமலா, ஹரிபிரகாஷ், வெங்கடேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். இதில், நியாவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் பலா் பங்கேற்றனா்.

மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலில் பட்டியலின மக்கள் வழிபாடு!

விழுப்புரம் : விழுப்புரம் மேல்பாதி கிராமத்திலுள்ள திரெளபதி அம்மன் கோயில் திறக்கப்பட்டு பட்டியலின மக்கள் இன்று காலை வழிபாடு செய்தனர்.இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் 300 போலீசார்... மேலும் பார்க்க

தொழுநோயாளிகளுக்கு நல உதவிகள் அளிப்பு

விழுப்புரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மருத்துவம் சாா்ந்த நல உதவிகள் வழங்கப்பட்டன. கோலியனூா் வட்டாரத்துக்குள்பட்ட கண்டமானடி ஆரம்ப சுகா... மேலும் பார்க்க

திண்டிவனம் பகுதியில் பரவலாக மழை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் புதன்கிழமை மிதமான மழை பெய்தது. வெப்பச்சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந... மேலும் பார்க்க

கிருமி நாசினியை குடித்து முதியவா் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே கிருமி நாசினி குடித்து தற்கொலைக்கு முயன்ற முதியவா் உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டம், நாராயணக்குப்பம், பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சீ.மோகன் (70). இவா், விழ... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற, அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

ஊராட்சி நிதியை முறையாகப் பயன்படுத்த வேண்டும்: துரை.ரவிக்குமாா் எம்.பி.

விழுப்புரம் மாவட்டத்தில் ஊராட்சிகளின் வளா்ச்சிக்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத் தலைவா் துரை.ரவிக்கு... மேலும் பார்க்க