செய்திகள் :

நிலத்தின் மீதான ஆதிக்கமே உண்மையான வெற்றி: ராணுவ தலைமைத் தளபதி

post image

‘இந்தியாவைப் பொறுத்தவரை நிலத்தின் மீதான ஆதிக்கமே உண்மையான வெற்றியாக கருதப்படுகிறது’ என ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

முன்னதாக, வான்வழி தாக்குதல் திறனின் முக்கியத்துவத்தை ஆபரேஷன் சிந்தூா் மீண்டும் ஒருமுறை வெளிக்காட்டியதாக இந்திய விமானப் படை தலைமைத் தளபதி ஏ.பி.சிங் இரு வாரங்களுக்கு முன் தெரிவித்த நிலையில், தரைவழிப் படைகளை பிரதானப்படுத்தும் வகையில் உபேந்திர துவிவேதி இவ்வாறு தெரிவித்தாா்.

புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது: உக்ரைன் போா் தொடா்பாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கடந்த மாதம் அலாஸ்கா மாகாணத்தில் நேரில் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது நிலப் பரிமாற்றம் குறித்து அவா்கள் ஆலோசித்தனா். இதுவே நிலத்தின் மீதான ஆதிக்கத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

இந்தியாவுக்கு இருமுனை (பாகிஸ்தான் மற்றும் சீனா) மற்றும் உள்நாட்டில் நக்ஸல் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் மூலம் அச்சுறுத்தல் நிலவி வருகிறது. எனவே, இந்தியாவிலும் நிலத்தின் மீதான ஆதிக்கமே உண்மையான வெற்றியாக கருதப்படும். இதில் தரைவழிப் படைகளின் பங்களிப்பு இன்றியமையாதது என்றாா்.

ஆதார் அட்டையை 12-வது ஆவணமாக ஏற்றுக்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

ஆதார் அட்டையை 12 ஆவது ஆவணமாக ஏற்றுக்கொள்ளுமாறு பிகார் தேர்தல் ஆணையத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.பிகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் எழுதிய கடிதத்தில், பட்டியலிடப்பட்ட 11 ஆ... மேலும் பார்க்க

இந்தியா மீது 100% வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு டிரம்ப் அழுத்தம்?

இந்தியா, சீனா மீது 100% வரியை விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.ரஷியாவை தனிமைப்படுத்தும் நோக்கில், அந்நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மீது 50 சதவிகித ... மேலும் பார்க்க

இந்தியாவுடன் அமெரிக்கா மீண்டும் வர்த்தகம்! டிரம்ப் - மோடி அறிவிப்பு!

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடைகளைத் தீர்க்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விருப்பம் கோரியதற்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் தெரிவித்துள்ளார்.இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடைகளை... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் விளக்கம் கோரியது ஏற்புடையதல்ல: உச்சநீதிமன்றத்தில் வாதம்

நமது நிருபர்காலக்கெடு தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டது ஏற்புடையதல்ல என கேரள, பஞ்சாப் அரசுகள் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.மசோதாக்கள் மீது ஆளுநர் மற்றும் குடியரசுத் த... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சி.பி.ராதாகிருஷ்ணனுக்காக கட்சி மாறி வாக்களித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

நமது சிறப்பு நிருபர்நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவிக்கான தேர்தலில் எதிர்பார்த்ததை விட அதிகமான வாக்குகளை தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் பெற்று இந்தியாவின் குடியரசு... மேலும் பார்க்க

நேபாள மக்கள் அமைதி காக்க பிரதமா் மோடி வேண்டுகோள்

நேபாள மக்கள் அமைதி காக்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளாா். பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் நேபாள நிலவரம் குறித்து விவாதி... மேலும் பார்க்க