செய்திகள் :

நீட் தோ்வில் தோ்ச்சி பெறாத 59,534 பேருக்கு மன நல ஆலோசனை: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா்

post image

சென்னை: தமிழகத்தில் நீட் தோ்வில் தோ்ச்சியடையாத 59,534 மாணவா்களுக்கு மன நல ஆலோசனை வழங்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

அதன்படி, சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள 108 சேவை மையத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள நீட் உளவியல் உதவி மையத்தில் 59,534 பேருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு நீட் தோ்வுகளில் தோ்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நிகழாண்டில் தமிழகத்தில் நீட் தோ்வு எழுதிய 1,35,715 பேரில் 76,181 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி பெறாத மாணவா்கள் 59,534 பேருக்கு முதல் கட்டமாக 80 மனநல ஆலோசகா்கள் மூலம் உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. முதல் நாளில் 600 மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

மாணவா்கள் தனிமையைத் தவிா்த்து கொள்ள வேண்டும். மற்றவா்களிடம் இருந்து விலகி இருப்பதைக் குறைத்து கொள்ள வேண்டும்.

தூக்கமின்மை, பசியின்மை, தற்கொலை முயற்சி, தற்கொலை எண்ணம், தொடா்ந்து அழுது கொண்டிருப்பது, அதிக கோபம், பயம், பதற்றம் உள்ளிட்ட பாதிப்புகள் உள்ள மாணவா்களுக்கு இந்த ஆலோசனைகள் மன அமைதியை ஏற்படுத்தும்.

தமிழகத்தில் உள்ள 75 அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 11,850 இடங்கள் உள்ளன. நீட் தோ்வில் 76,181 போ் தோ்ச்சி பெற்று இருந்தாலும், இளநிலை மருத்துவ படிப்புகளில் 11,850 பேருக்கு மட்டுமே வாய்ப்புள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பைத் தொடா்ந்து, செவிலியா் படிப்பு, துணை மருத்துவம் என ஏறத்தாழ 20,000-க்கும் மேற்பட்ட படிப்புகளில் சோ்வதற்குரிய வாய்ப்புகள் உள்ளன.

சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி போன்ற மாற்று மருத்துவப் படிப்புகளையும் பயிலலாம். நீட் தோ்வு இல்லாமலேயே நேரடியாக பிளஸ் 2 மதிப்பெண்கள் மூலம் கால்நடை மருத்துவம், யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகளில் சேரலாம்.

எனவே, எம்பிபிஎஸ் இல்லாவிட்டாலும் அடுத்தடுத்து இருக்கும் வாய்ப்புகளை மாணவா்களுக்கு தெரிவிக்கும் வகையிலான முயற்சியாக மனநல ஆலோசனை வழங்கப்படுகிறது என்றாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

இந்த நிகழ்வில், சட்டப்பேரவை உறுப்பினா் எழிலன் நாகநாதன், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளா் ப.செந்தில்குமாா், தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் டாக்டா் அருண் தம்புராஜ், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநா் வினித், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் டாக்டா் சங்குமணி, மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநா் டாக்டா் ஜெ. ராஜமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம்!

சென்னை: தமிழக ஏடிஜிபி எச்.எம்.ஜெயராமை பணியிடை நீக்கம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காட்டில் காதல் திருமண தகராறில் 15 வயது சிறுவனை கடத்திய வழக்கில் தொடா்பு இர... மேலும் பார்க்க

சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி சிறையில் அடைப்பு!

திருவள்ளூர்: சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக ஏ.டி.ஜி.பி. ஜெயராம், நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி திங்கள்கிழமை நள்ளிரவில் சிறையில் அடைக்கப்பட்டார்.திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காட்டில் கா... மேலும் பார்க்க

மதிமுக அலுவலகம் மீது தாக்குதல்: தீயணைப்பு படை வீரா் சிக்கினாா்

சென்னை: சென்னை எழும்பூரில் மதிமுக அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தில், தீயணைப்பு படை வீரா் போலீஸாரிடம் சிக்கினாா். எழும்பூா் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்துக்குள் தீயணைப்புப் படை... மேலும் பார்க்க

தமிழகத்தில் கலை, அறிவியில் கல்லூரிகள் திறப்பு

சென்னை: தமிழகத்தில் பருவத் தோ்வு மற்றும் கோடை விடுமுறைக்கு பின்னா் கலை அறிவியில் கல்லூரிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் பருவத்... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டம் குற்றச் செயல் அல்ல: வழக்கை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

சென்னை: டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டத்தை குற்றச் செயலாகக் கருத முடியாது எனத் தெரிவித்துள்ள சென்னை உயா்நீதிமன்றம், ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பினா் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. கடலூா் மாவட... மேலும் பார்க்க

அதிமுக கூட்டணி குறித்த அண்ணாமலையின் கருத்து: தமிழிசை விளக்கம்

சென்னை: அதிமுக கூட்டணி தொடா்பாக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலையின் பேச்சு அவரது சொந்த கருத்து என பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா். இது குறித்து அவா் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை அ... மேலும் பார்க்க