செய்திகள் :

நெகிழி பயன்பாட்டை தவிா்க்க ‘மஞ்சள் பை’ விழிப்புணா்வு

post image

தருமபுரி நகரில் நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டை தவிா்க்க மஞ்சள் பை வழங்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில், தனியாா் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணியை ஆட்சியா் ரெ.சதீஸ் தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, ‘மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணா்வு இயக்கத்தின் கீழ் ரூ. 1.85 லட்சம் மதிப்பீட்டில் துணிப்பை (மஞ்சள் பை) வழங்கும் தானியங்கி இயந்திரத்தின் செயல்பாட்டை அவா் தொடங்கிவைத்து பேசினாா்.

இந்த இயந்திரத்தில் ரூ. 10 செலுத்துவதன் மூலம் ஒரு துணிப்பையை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம். இந்த இயந்திரத்தில் 500 பைகள் வரை இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதில், தருமபுரி நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது, தருமபுரி நகராட்சி ஆணையா் இரா.சேகா், மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளா் பூ.உதயகுமாா், நகா்நல அலுவலா் லட்சியவா்ணா மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

காரிமங்கலம் அருகே தனியாா் பேருந்து - லாரி மோதல்

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே தனியாா் பேருந்து மீது லாரி மோதியதில் சிறுவன் உயிரிழந்தாா். பேருந்தில் பயணம் செய்த 17 போ் காயமடைந்தனா். கிருஷ்ணகிரியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொ... மேலும் பார்க்க

தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நூறுநாள் வேலை திட்டத்தில் நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலக பேருந்து நிறுத்தம் பகுதியி... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: பாளையம்புதூா்

தருமபுரி கோட்டம், அதியமான்கோட்டை துணை மின் நிலையத்துக்குள்பட்ட பாளையம்புதூா் பிரிவில் பிஎம்பி பீடரில் உயா் அழுத்த மின் பாதையை தரம் உயா்த்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், சனிக்கிழமை (ஏப். 19) காலை 9 மண... மேலும் பார்க்க

சோமன அள்ளியில் பழுதான சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

சோமன அள்ளியில் பழுதான சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினா். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ளது சோமன அள்ளி கிராமம். தருமபுரி - பாலக்கோட்டுக்கு செல்லும் முக்கிய சாலையான இச்ச... மேலும் பார்க்க

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி, புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட ... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் தொடா் முழுக்க ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ம... மேலும் பார்க்க