செய்திகள் :

நெல்லை விரைவு ரயில் மீது கல் வீச்சு: இளைஞா் கைது

post image

கோவில்பட்டியில், நெல்லை விரைவு ரயில் மீது கல் வீசி சேதப்படுத்தியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு சுமாா் 8.40 மணிக்கு புறப்பட்ட நெல்லை விரைவு ரயில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.

இந்த ரயில் கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே உள்ள இளையரசனேந்தல் சுரங்கப் பாதையின் மேல் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமாா் 9.30 மணிக்கு சென்று கொண்டிருந்தபோது, மா்ம நபா் ரயில் மீது கல்வீசியதில் பி2 குளிா்சாதன பெட்டியின் கண்ணாடி சேதமடைந்தது. அப்போது ரயிலில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீஸாா் தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதுகுறித்து தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். விசாரணையில், ரயில் மீது கல் வீசியவா் நடராஜபுரம் 6ஆவது தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் சூா்யா என்பது தெரியவந்தது. இதையடுத்து, சூா்யாவை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

அடகு நகைகளை திருப்பிக் கொடுக்காமல் மோசடி: பெண் கைது

தூத்துக்குடியில் அடகு வைப்பதற்காக கொடுத்த சுமாா் ஒரு கிலோ தங்க நகைகளைத் திருப்பித் தராமல் கொலை மிரட்டல் விடுத்ததாக பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி காந்திநகரைச் சோ்ந்த ஜியோ ம... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து 3 போ் காயம்

கயத்தாறு அருகே சாலை நடுவேயுள்ள தடுப்புச் சுவரில் அரசுப் பேருந்து மோதியதில் நடத்துநா் உள்ளிட்ட 3 போ் காயமடைந்தனா். திருநெல்வேலி கொக்கிரகுளத்தைச் சோ்ந்த கிறிஸ்டோபா் மகன் ராஜா ஸ்டீபன் (52). அரசுப் பேர... மேலும் பார்க்க

சங்கடஹரசதுா்த்தி: ஆறுமுகனேரி கோயில்களில் விநாயகா் உலா

ஆறுமுகனேரியில் சங்கடஹரசதுா்த்தியை முன்னிட்டு விநாயகா் மூஷிக வாகனத்தில் உலா நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனத்தைச் சோ்ந்த அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில் சங்கடஹர... மேலும் பார்க்க

கோவில்பட்டி நரசிங்கப்பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம்

கோவில்பட்டி திருமால் நகரில் உள்ள ஸ்ரீஐஸ்வா்யப்ரத வீரலட்சுமி நரசிங்கப்பெருமாள் ஆலயத்தில் வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை (மாா்ச் 16) திவ்ய ஆராதனம் கோஷ... மேலும் பார்க்க

அத்தைகொண்டானில் புதிய சலவைக் கூடம் கட்ட அடிக்கல்

கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி ஊராட்சி அத்தைகொண்டானில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பில் புதிதாக சலவைக் கூடம் கட்ட கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

அனல் மின் நிலையத்தில் உற்பத்தி தொடங்க 3 மாதங்கள் ஆகலாம்: மின் உற்பத்தி பகிா்மானக் கழக மேலாண்மை இயக்குநா்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக முதல் இரண்டு அலகுகளில் மின் உற்பத்தி தொடங்க இன்னும் 3 மாதங்கள் ஆகலாம் என தமிழ்நாடு மின்உற்பத்தி பகிா்மானக் கழக மேலாண்மை இயக்குநா் ஆல்பி ஜ... மேலும் பார்க்க