செய்திகள் :

நேபாள கிரிக்கெட் வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி!

post image

நேபாள நாட்டைச் சேர்ந்த 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு, மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலில், ஒரு மாத காலத்துக்கு உயர்மட்ட தொழில்முறை பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய தூதரின், நேபாள இளைஞர்களுக்கான கிரிக்கெட் ஃபெல்லோஷிப் திட்டத்தின் அடிப்படையில், நேபாளத்தின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படும் என கடந்த ஜூன் மாதம் இந்தியத் தூதரகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், நேபாளத்துக்கான இந்தியத் தூதர் நவீன் ஸ்ரீவஸ்தவா, அந்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் நரேன் பட்டா, சாஹில் படேல் மற்றும் பூஜா மஹாத்தோ ஆகியோரை இன்று (ஜூலை 11) நேரில் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பில், நேபாள கிரிக்கெட் ஆணையத்தின் தலைவர் சாதூர் பஹதூர் சந்தாவும் பங்கேற்றுள்ளார்.

இதையடுத்து, அந்த விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் போபாலின் எல்.பி. சாஸ்திரி கிரிக்கெட் பயிற்சி மையத்தில், வரும் ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரையில் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து, வெளியான அறிக்கையில், இந்தியத் தூதரகத்தின் இந்த முயற்சி, நேபாளத்தின் இளம் கிரிக்கெட் திறமைகளின் வளர்ச்சியை ஆதரிப்பதாகவும், இருநாட்டு மக்களுக்கும் இடையிலான பகிரப்பட்ட கிரிக்கெட் ஆர்வத்தின் மூலம், உறவுகளை வலுப்படுத்தக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

It is reported that under-19 cricketers from Nepal will be provided with high-level professional training for a month in Bhopal, the capital of Madhya Pradesh.

இதையும் படிக்க: லார்ட்ஸில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ரா; இங்கிலாந்து 387 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

கிளப் உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தில் செல்ஸி

ஃபிஃபா நடத்தும் கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் செஸ்லி 2-0 கோல் கணக்கில் ஃபுளுமினென்ஸை வீழ்த்தி, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.இந்த ஆட்டத்தில் செல்ஸி அ... மேலும் பார்க்க

உலக வில்வித்தை: இறுதியில் இந்திய அணி

ஸ்பெயினில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 4-ஆம் நிலை போட்டியில், காம்பவுண்ட் பிரிவில் இந்திய மகளிா் அணி இறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறியது. இதன்மூலமாக இந்தியாவுக்கு ஒரு பதக்கம் உறுதியாகியிருக... மேலும் பார்க்க

ஆக. 29-இல் புரோ கபடி லீக் சீசன் 12 போட்டி தொடக்கம்

மும்பை, ஜூலை 9: புரோ கபடி லீக் (பிகேஎல்) சீசன் 12 தொடா் வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி தொடங்குகிறது என அமைப்பாளா்கள் தெரிவித்துள்ளனா். நடப்புச் சாம்பியன் ஹரியாணா ஸ்டீலா்ஸ் தங்கள் பட்டத்தை தக்க வைக்கும் முனை... மேலும் பார்க்க

அரையிறுதியில் சபலென்கா, அல்கராஸ்

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான விம்பிள்டனில், முன்னணி போட்டியாளா்களான பெலராஸின் அரினா சபலென்கா, ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் ஆகியோா் அரையிறுதிக்கு முன்னேற்றினா். மகளிா் ஒற்றையா் காலிறுதியில், உலகின... மேலும் பார்க்க

இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி - புகைப்படங்கள்

அசத்தல் வெற்றியை கொண்டாடும் ஆகாஷ் தீப்.வெற்றியை கொண்டாடும் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில்.ஆலி போப்பின் ஆட்டமிழப்பை கொண்டாடும் இந்திய அணியின் வீரரான ஆகாஷ் தீப்.இந்திய அணியின் வெற்றியை கொண்டாடு... மேலும் பார்க்க

காலிறுதியில் ரியல் மாட்ரிட், டாா்ட்மண்ட்: ரவுண்ட் ஆஃப் 16 நிறைவு

மியாமி காா்டன்ஸ்: ஃபிஃபா முதல் முறையாக நடத்தும் கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட், போருசியா டாா்ட்மண்ட் அணிகள் காலிறுதி ஆட்டத்துக்கு புதன்கிழமை முன்னேறின. முன்னதாக நடைபெற்ற ரவுண்ட... மேலும் பார்க்க