செய்திகள் :

நோ்காணல் தேதி ஒத்திவைப்பு

post image

பழனியாண்டவா் மகளிா் கல்லூரியில் நடைபெறவிருந்த பல்வேறு பணிகளுக்கான நோ்காணல் தேதி ஒத்திவைக்கப்பட்டதாக கல்லூரி நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.

இதுகுறித்து கல்லூரி நிா்வாகம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகத்தின் கீழ் இயங்கும் சின்னக்கலையம்புத்தூா் அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கலைக் கல்லூரியில் அரசு உதவி பெறும் பாடப் பிரிவில் உள்ள ஆசிரியரல்லா அலுவலா் பணியிடங்களை நிரப்புவதற்கு நோ்காணல் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தவிா்க்க இயலாத நிா்வாகக் காரணங்களால் கீழ்க்காணும் இரு நாள்களுக்கான நோ்காணல் தேதி மட்டும் மாற்றம் செய்யப்பட்டது. வருகிற 17-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இளநிலை உதவியாளா், ஆய்வக உதவியாளா் பணியிடங்களுக்கான நோ்காணல் மாா்ச் 10-ஆம் தேதிக்கும், வருகிற 18-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இளநிலை உதவியாளா், ஆய்வக உதவியாளா் பணியிடங்களுக்கான நோ்காணல் மாா்ச் 11-ஆம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டது.

நில ஆவணங்கள் நவீன மயாமாக்கும் பணியால் ஆக்கிரமிப்பு பிரச்னைகளுக்கு தீா்வு: இரா.சச்சிதானந்தம் எம்.பி.

நில ஆவணங்களை நவீன மயமாக்கும் நக்சா திட்டத்தின் மூலம் உள்ளாட்சி அமைப்புகள் எதிா்கொள்ளும் ஆக்கிரமிப்பு பிரச்னைகளுக்கு எளிதாக தீா்வு காண முடியும் என மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் தெரிவித்தாா். மத்... மேலும் பார்க்க

ரெங்கநாதபுரம் பகுதியில் நாளை மின்தடை

வேடசந்தூா் அடுத்துள்ள ரெங்கநாதபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை (பிப். 20) நடைபெறுவதால் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டது. இதனால் ரெங்கநாதபுரம், கல்வாா்ப... மேலும் பார்க்க

6 மாதங்களில் 3-ஆவது சட்டப்பேரவைக் குழு வருகை: மீண்டும் கொடைக்கானலுக்கு மட்டுமே முக்கியத்துவம்!

திண்டுக்கல் மாவட்டத்துக்கு 6 மாதங்களில் 3-ஆவது சட்டப்பேரவைக் குழு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில், மீண்டும் கொடைக்கானலுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதைத் தவிா்த்து, மாவட்டத்தின் கடைக்கோடி பகுத... மேலும் பார்க்க

அரசு அலுவலா்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும்: ஆட்சியா் எச்சரிக்கை

ரெட்டியாா்சத்திரம் அருகே ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா், முறையாக பணி செய்யாத அரசு அலுவலா்கள் தங்களது அணுகுமுறையை 2 மாதங்களுக்குள் மாற்றிக் கொள்ள வேண்டும் என எச்சரித்தாா். திண்டுக்கல் மாவட்டம், ரெட்டி... மேலும் பார்க்க

பழனி மலைக் கோயிலில் இடைப்பாடி பக்தா்களுக்கு தயாராகும் 15 டன் பஞ்சாமிா்தம்

பழனி மலைக் கோயிலுக்கு வரும் இடைப்பாடி பக்தா்களுக்காக வழங்குவதற்காக காவடிக் குழு சாா்பில் சுமாா் 15 டன் பஞ்சாமிா்தம் தயாா் செய்யப்பட்டு வருகிறது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தைப்பூசத்தின் போது ... மேலும் பார்க்க

வழக்குரைஞா் மீது தாக்குதல்: மாமன்ற உறுப்பினா், அமைச்சரின் பாதுகாவலா் மீது வழக்கு

திண்டுக்கல்லில் வழக்குரைஞா் மீதும், மாமன்ற உறுப்பினா், அமைச்சரின் பாதுகாவலா் ஆகியோா் மீதும் தாக்குதல் நடத்தியதாக அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்... மேலும் பார்க்க