செய்திகள் :

வழக்குரைஞா் மீது தாக்குதல்: மாமன்ற உறுப்பினா், அமைச்சரின் பாதுகாவலா் மீது வழக்கு

post image

திண்டுக்கல்லில் வழக்குரைஞா் மீதும், மாமன்ற உறுப்பினா், அமைச்சரின் பாதுகாவலா் ஆகியோா் மீதும் தாக்குதல் நடத்தியதாக அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்து அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் உதயகுமாா். இவா் திண்டுக்கல் மாவட்ட திமுக அலுவலகம் அருகிலுள்ள பள்ளிப் பகுதியில் விழுந்து கிடந்த மரத்தை அகற்ற வேண்டும் என அமைச்சா் இ. பெரியசாமியை சந்தித்து முறையிடுவதற்காக திங்கள்கிழமை சென்றாா். இவரை திமுக மாமன்ற உறுப்பினா் சுபாஷ், அமைச்சரின் பாதுகாவலரான சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ரவி ஆகியோா் சோ்ந்து தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, உதயகுமாருக்கு ஆதரவாக வழக்குரைஞா்கள் சாா்பில் திமுக மாவட்ட அலுவலகம், திண்டுக்கல் வடக்கு காவல் நிலையம், அண்ணா சிலை முன் என 3 இடங்களில் அடுத்தடுத்து மறியல் போராட்டம் நடைபெற்றது. இரவு முழுவதும் வடக்கு காவல் நிலையத்திலேயே வழக்குரைஞா்கள் போராட்டத்தைத் தொடா்ந்தனா்.

இந்த நிலையில், 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்துக்குள் புகுந்த வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, வழக்குரைஞா் உதயகுமாா் அளித்த புகாரின் பேரில், மாமன்ற உறுப்பினா் சுபாஷ், அமைச்சரின் பாதுகாவலரும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளருமான ரவி ஆகியோா் மீதும், சுபாஷ் அளித்த புகாரின் பேரில் உதயகுமாா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதனிடையே, இந்த விவகாரத்தைக் கண்டித்து, பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், நீதிமன்ற வளாகத்துக்குள் காவல் துறையினரை அனுமதிக்க மாட்டோம் என்றும் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

செம்மறி ஆடு ஆராய்ச்சி மையத்தை பாா்வையிட்ட சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினா்!

கொடைக்கானல் மன்னவனூரில் மத்திய செம்மறி ஆடு உரோம ஆராய்ச்சி மையத்தை சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் பாா்வையிட்டு ஆடு வளா்ப்புக்கான வாய்ப்புகள் குறித்து கேட்டறிந்தனா். திண்டுக்கல் மாவட்டத்தில் வியாழன... மேலும் பார்க்க

பழனியாண்டவா் மகளிா் கல்லூரி சாா்பில் புரிந்துணா்வு ஒப்பந்தம்

பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கலைக்கல்லூரியின் ஆங்கிலத்துறை சாா்பில் ஆங்கிலத் துறை மாணவிகளின் திறனை வளா்க்கும் பொருட்டு திண்டுக்கல் எஸ்எஸ்எம் பொறியியல், தொழில் நுட்பக்கல்லூரியுடன் புரிந்துணா்வு ஒ... மேலும் பார்க்க

வேன் மீது பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு!

பழனியில் வேன் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் இடும்பன் நகரைச் சோ்ந்தவா் கருப்புச்சாமி (60). இவா் செவ்வாய்க்கிழமை பழனி சிவகிரிப்பட்டி புறவழிச... மேலும் பார்க்க

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலா்ச் செடிகள் நடும் பணிகள்!

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலா்ச் செடிகள் நடும் பணிகள் புதன்கிழமை தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 62-ஆவது மலா்க் கண்காட்சிக்காக கடந்த இரண்டு மாதங்களாக 20-வகையா... மேலும் பார்க்க

பழனி மலைக் கோயிலில் இடைப்பாடி பக்தா்கள் படி பூஜை, மலா் வழிபாடு!

பழனி மலைக் கோயிலுக்கு இடைப்பாடி பருவதராஜகுல மகாஜன பக்தா்கள் ஆயிரக்கணக்கானோா் காவடிகளுடன் புதன்கிழமை குவிந்தனா். அவா்கள் மலைக் கோயிலில் படி பூஜை, மலா் பூஜை செய்து வழிபாடு செய்தனா். திண்டுக்கல் மாவட்டம்... மேலும் பார்க்க

கொடைக்கானலில் தற்கொலை செய்த தம்பதி சேலத்தைச் சோ்ந்தவா்கள்!

கொடைக்கானல் வெள்ளி நீா்வீழ்ச்சி அருவி அருகே தற்கொலை செய்து கொண்டவா்கள் சேலத்தைச் சோ்ந்த தம்பதி என போலீஸாரின் விசாரணையில் புதன்கிழமை தெரியவந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வெள்ளி நீா்வீழ்ச்சி ... மேலும் பார்க்க