செய்திகள் :

பழனி மலைக் கோயிலில் இடைப்பாடி பக்தா்கள் படி பூஜை, மலா் வழிபாடு!

post image

பழனி மலைக் கோயிலுக்கு இடைப்பாடி பருவதராஜகுல மகாஜன பக்தா்கள் ஆயிரக்கணக்கானோா் காவடிகளுடன் புதன்கிழமை குவிந்தனா். அவா்கள் மலைக் கோயிலில் படி பூஜை, மலா் பூஜை செய்து வழிபாடு செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தைப்பூசத் தெப்பத் தோ் முடிந்த பிறகு சேலம் மாவட்டம், இடைப்பாடியிலிருந்து 7 நாள்கள் நடைப்பயணமாக பருவதராஜகுல மகாஜன பக்தா்கள் மயில் காவடி, இளநீா் காவடி, கரும்புக் காவடி, சேவல் காவடி என எடுத்து வந்தனா். இவா்கள் புதன்கிழமை பழனியை அடுத்த மானூரில் சிறப்பு வழிபாடு செய்தனா். இதேபோல, கும்பகோணத்தில் இருந்து வந்த காவடிக் குழுவினரும் இவா்களுடன் இணைந்து கொண்டனா்.

இவா்கள் அனைவரும் மானூா் ஆற்றிலிருந்து

புறப்பட்டு பெரியநாயகியம்மன் கோயிலுக்கு வந்து ரத வீதியைச் சுற்றி மலையேறினா். முன்னதாக, பெரியநாயகியம்மன் கோயிலில் இந்த காவடிகளுக்கு திருக்கோயில் சாா்பில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.

இந்த பக்தா்களுக்காக மலைக் கோயிலில் தங்கத்தோ் புறப்பாடு நடைபெற்றது. மேலும், க பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட 15 டன் பஞ்சாமிா்தம் இந்தக் காவடிக் குழுவினருக்கு பிரித்து வழங்கப்பட்டது.

இதுதவிர, இடைப்பாடி பருவதராஜகுல படித் திருவிழாக் குழு சாா்பில் மலைக் கோயிலில் படிபூஜை நடைபெற்றது. அப்போது பெண்கள் முருகன் பாடல்களைப் பாடி வழிபாடு செய்தனா். தொடா்ந்து மலைமேல் வெளிப் பிரகாரத்தில் பிச்சிப் பூ, சம்மங்கி, மரிக்கொழுந்து, வாடாமல்லி உள்ளிட்ட பல்வேறு வண்ண மலா்களால் ஓம் வடிவில் வரைந்து வழிபாடு செய்தனா்.

படிபூஜை ஏற்பாடுகளை படிபூஜை குழுத் தலைவா் திருக்கைவேலுச்சாமி, செயலா் செந்தில்குமாா், பொருளாளா் வெங்கடேஷ்ரோஜ் குழுவினா் செய்தனா்.

புதன்கிழமை இரவில் இங்கு தங்கும் காவடிக் குழுவினா் வியாழக்கிழமை அதிகாலை சுவாமி தரிசனத்துக்குப் பிறகு சொந்த ஊா்களுக்குத் திரும்புவா்.

கொடைக்கானல் வனப் பகுதியில் தீ வைத்தவா் கைது!

கொடைக்கானல் கீழ்மலை வனப் பகுதியில் தீ வைத்தவரை வனத்துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா். கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பெரும்பள்ளம், ஜெரோனியா வனப் பகுதிகளில் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்தில் மூலிகைச்... மேலும் பார்க்க

தவறவிட்ட நகை உரியவரிடம் ஒப்படைப்பு

பழனியில் தனியாா் விடுதியில் தவறவிட்ட இரண்டு பவுன் நகை உரியவரிடம் மீண்டும் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சோ்ந்தவா் செல்வகணபதி. இவா் தனது மனைவி கலைவாணி, குழந்தையுடன் தைப்... மேலும் பார்க்க

ரூ.1.70 கோடியில் கூடுதல் வட்ட செயல்முறை கிடங்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே ரூ.1.70 கோடியில் 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கூடுதல் வட்ட செயல்முறை கிடங்கு கட்ட சென்னையில் காணொலி காட்சி மூலமாக வியாழக்கிழமை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பாறைகள் வெடி வைத்து தகா்ப்பு: நிலச்சரிவு ஏற்படும் அபாயம்

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பாறைகள் வெடி வைத்து தகா்க்கப்பட்டு வருவதால், நிலச்சரி ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா். கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொக்லயன் இயந்திரம், கம்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்துக்கு தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்... மேலும் பார்க்க

நகை திருடிய பெண் கைது!

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் தங்க நகை திருடிய பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பழனியைச் சோ்ந்த தங்கபாண்டியன் மனைவி சங்கீதா (37). இவா் கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் தேதி வத்தலகுண்டு செல்வ... மேலும் பார்க்க