பாஜக எம்.பி. பான்சுரி ஸ்வராஜுக்கு எதிரான சத்யேந்தா் ஜெயினின் அவதூறு வழக்கு தள்ளு...
பழனி மலைக் கோயிலில் இடைப்பாடி பக்தா்களுக்கு தயாராகும் 15 டன் பஞ்சாமிா்தம்
பழனி மலைக் கோயிலுக்கு வரும் இடைப்பாடி பக்தா்களுக்காக வழங்குவதற்காக காவடிக் குழு சாா்பில் சுமாா் 15 டன் பஞ்சாமிா்தம் தயாா் செய்யப்பட்டு வருகிறது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தைப்பூசத்தின் போது லட்சக்கணக்கான பக்தா்கள் காவடி எடுத்து பாத யாத்திரையாக வருகின்றனா். தைப்பூசத் தேரோட்டத்துக்கு முன்னதாக வந்து தைப்பூசம் முடிந்த பிறகு மலைக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வது நகரத்தாா் காவடியாகும். இதேபோல, தைப்பூசம் தெப்பத்தோ் உற்சவம் முடிந்த பிறகு மலைக் கோயிலுக்கு வந்து இரவு தங்கும் சிறப்பு பெற்ற காவடி இடைப்பாடி ஸ்ரீபருவதராஜகுல மகாஜனங்கள் காவடியாகும்.
நிகழாண்டு 365-ஆவது ஆண்டாக வருகை தரும் இடைப்பாடி காவடி கடந்த 14-ஆம் தேதி புறப்பட்டனா். சின்னமணலி, வெள்ளாண்டிவலசை, இடைப்பாடி, க.புதூா் உள்ளிட்ட பல்வேறு ஊா்களில் இருந்து ஆயிரக்கணக்கானோா் கிளம்பி பாத யாத்திரையாக புதன்கிழமை பழனியை வந்தடைவா்.

இவா்கள் புதன்கிழமை இரவு மலைக் கோயிலில் தங்கி மறுநாள் ஊருக்கு கிளம்புகின்றனா். இவா்களுடைய காவடிக்கு மட்டுமே மலைக் கோயிலில் இரவு தங்கும் உரிமை வழங்கப்படுகிறது. இதன்படி, நிகழாண்டு பாத யாத்திரையாக வரும் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்க 15 டன் அளவிலான பஞ்சாமிா்த பிரசாதம் செவ்வாய்க்கிழமை மலைக் கோயிலில் தயாரிக்கப்படுகிறது. இதற்காக 10 டன் மலை வாழைப்பழம், 9 டன் நாட்டுச்சக்கரை, 50 மூட்டைகள் பேரீட்சை, கற்கண்டு, நெய், தேன், ஏலக்காய் உள்ளிட்ட பொருள்களை கொண்டு பஞ்சாமிா்தம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
புதன்கிழமை மலை மீது தங்கி சுவாமி தரிசனம் முடிந்த பிறகு, பஞ்சாமிா்த அபிஷேகத்தை எடப்பாடி பக்தா்கள் தங்களுக்குள் பங்கிட்டு கொள்கின்றனா். இந்த பஞ்சாமிா்தம் சுமாா் ஒரு ஆண்டு வரை கெடாது என இவா்கள் தெரிவிக்கின்றனா். பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் நடை பயணமாகவே இவா்கள் தங்கள் ஊா்களுக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.