செய்திகள் :

பகுஜன் சமாஜ் கட்சிப் பதவியிலிருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நீக்கம்!

post image

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து, கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, ஏப்ரல் 14ஆம் தேதி, அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில், கட்சித் தலைவர் பி. ஆனந்தனின் வழிகாட்டுதல் மற்றும் தலைமையின்கீழ், கட்சி தொடர்ந்து வளர்ச்சி மற்றும் உறுதிபெறும். முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றுவதற்கு வலியுறுத்தப்படும்.

மேலும், கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதயின் வழிகாட்டுதல்படி, தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் நீக்கப்படுகிறார். அவர் தன்னுடைய குடும்பத்தைக் கவனித்துக் கொள்வதிலும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையிலும் அவர் கவனம் செலுத்துவார். அவர் கட்சிப் பணி எதிலும் தலையிட மாட்டார். ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் அவருக்குப் பதிலாகக் கட்சிப் பணிகளை கவனித்துக் கொள்வார். பகுஜன் சமாஜ் கட்சி, ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு தங்களது முழு ஆதரவையும் அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற்போக்குத்தனமான விதிகளை மறுஆய்வு செய்த நீதித்துறைக்கு நன்றி: முதல்வர்

வக்ஃப் திருத்தச் சட்டத்தின்படி, வக்ஃப் வாரிய உறுப்பினர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.வக்ஃப் திருத்தச் சட்டம் தொடர்பான விவகாரத்தி... மேலும் பார்க்க

நமது பிள்ளைகளுக்கு நமது ஊரிலேயே அதிக ஊதியம் தரும் வேலைவாய்ப்புகள்: டி.ஆர்.பி. ராஜா

தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், விண்வெளித் துறையில் கவனம் செலுத்த ஒப்புதல் வழங்கப்பட்டதாக வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவ... மேலும் பார்க்க

ஏற்காடு, ஏலகிரியில் ரோப் கார் வசதி!

ஏற்காடு மற்றும் ஏலகிரியில் கம்பிவட ஊர்தி(ரோப் கார்) வசதி அமைத்திட தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சட்டப்பேரவ... மேலும் பார்க்க

மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் கல்வெட்டு அருங்காட்சியகம்: தங்கம் தென்னரசு

மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் கல்வெட்டு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”தமிழ... மேலும் பார்க்க

தவெக தலைவர் விஜய் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

பகுஜன் சமாஜ் கட்சி விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்த தடைகோரி, பகுஜன் சமாஜ் ... மேலும் பார்க்க

கட்சி நிலைப்பாடு குறித்து பேட்டி அளிக்க வேண்டாம்: இபிஎஸ் வேண்டுகோள்

கட்சியின் நிலைப்பாடு குறித்து பேட்டி அளிக்க வேண்டாம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கட்சி நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிவ... மேலும் பார்க்க