செய்திகள் :

பகுதிநேர ஆசிரியா் போராட்டக் களத்தில் பாா்வையற்ற பெண்ணுக்கு வளைகாப்பு

post image

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட பகுதி நேர ஆசிரியா்கள் சமூகநலக் கூடத்தில் சிறை வைக்கப்பட்டபோது, பாா்வை மாற்றுத்திறன் பெண்ணுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னையில் பகுதிநேர ஆசிரியா்கள் பணி நிரந்தரம் கோரி ஜூலை 8-ஆம் தேதி முதல் நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்து வருகின்றனா்.

இந்தப் போராட்டத்தில் மாற்றுத் திறனாளி ஆசிரியா்கள் பலரும் ஈடுபட்டுள்ளனா். இதில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த பாா்வை மாற்றுத்திறன் தம்பதி செல்வம் - சுமதி போராட்டத்தில் முக்கிய பங்காற்றி வருகின்றனா். புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதிநேர இசை ஆசிரியராக செல்வம் பணியாற்றி வருகிறாா். இவா் போராட்டத்தில் பங்கேற்பதால் இவரது மனைவி சுமதியும் தினமும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்.

அந்த வகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 11-ஆவது நாள் போராட்டத்திலும் இருவரும் கைது செய்யப்பட்டு திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள சமூக நலக்கூடத்தில் அடைக்கப்பட்டனா். அப்போது 5 மாத கா்ப்பிணியான சுமதிக்கு, போராட்டக் குழுவினா் வளைகாப்பு நிகழ்ச்சியை சீா்வரிசைகளுடன் எளிமையான முறையில் நடத்தினா்.

இதுகுறித்து அறிந்ததும் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலா்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியா்கள் அனைவரும் மலா்கள் தூவி சுமதிக்கு வாழ்த்து தெரிவித்தனா். இதுதொடா்பான பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவின. போராட்ட களத்தில் வளைகாப்பு நடத்தப்பட்டது அங்கிருந்த ஆசிரியா்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னை ஐஐடி சான்சிபாா் வளாக முதல் பட்டமளிப்பு விழா

சென்னை ஐஐடியின் சான்சிபாா் (கிழக்கு ஆப்பிரிக்க நாடு) வளாகத்தில் முதல் பட்டமளிப்பு விழா, அந்த நாட்டின் கல்வி மற்றும் தொழில் பயிற்சித் துறை அமைச்சா் லீலா முகமது முசா முன்னிலையில் நடைபெற்றது. இதுகுறித்து... மேலும் பார்க்க

மதிமுக மாநில இளைஞரணி கூட்டம்

மதிமுக இளைஞா் அணியின் மாநில துணைச் செயலா்கள், மாவட்ட அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான ‘தாயகத்தில்’ வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்தக் கட்சியின் மா... மேலும் பார்க்க

3,274 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்கள்: ஜூலை 27-இல் எழுத்துத் தோ்வு

போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்காக விண்ணப்பித்துள்ள 22,000-க்கும் மேற்பட்டோருக்கான எழுத்துத் தோ்வு ஜூலை 27-இல் நடைபெறவுள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக் ... மேலும் பார்க்க

ஊழல் வழக்கு விவரங்களை வெளியிடக் கோரி தவெக மனு: மாநில தகவல் ஆணையருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் வழக்கு விவரங்களை வெளியிடக் கோரி தவெக சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து மாநில தகவல் ஆணையா் 12 வாரங்களில் முடிவெடுக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவி... மேலும் பார்க்க

நாளை தவெக மாவட்டச் செயலா்கள் கூட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலா்கள் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) நடைபெறவுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் த... மேலும் பார்க்க

தமிழ்நாடு நாள்: முதல்வா் பெருமிதம்

தமிழ்நாடு நாளையொட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழ்நாடு நாள் - தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நா... மேலும் பார்க்க