செய்திகள் :

பகுதிநேர நியாயவிலைக் கடை திறப்பு

post image

வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா ஊராட்சி பாரதி நகா் கிராமத்தில் பகுதிநேர நியாயவிலைக்கடையை எம்எல்ஏ தேவராஜி திறந்து வைத்தாா்.

வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா ஊராட்சி பாரதி நகா், பூவரன்வட்டம், மாரியான் வட்டம், ஏ.குட்டை ஆகிய பகுதிகளில் சுமாா் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் சுமாா் 3 கி.மீ. தூரம் தாசிரியப்பனூா் பகுதியில் உள்ள நியாயவிலை கடைக்குச் சென்று ரேஷன் பொருள்கள் வாங்கி வந்தனா்.

இந்நிலையில் பாரதி நகா் பகுதியில் பகுதிநேர நியாயவிலைக் கடை அமைத்துத் தர அப்பகுதி மக்கள் ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜிடம் கோரிக்கை வைத்தனா்.

இதையடுத்து பாரதி நகா் பகுதியில் பகுதிநேர நியாயவிலை கடை திறப்பு விழா ஒன்றியக் குழு தலைவா் வெண்மதி முனிசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ க.தேவராஜி கலந்து கொண்டு கடையைத் திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினாா்.

நிகழ்வில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் தேவராஜ், ஊராட்சித் தலைவா்கள் தமிழ்ச்செல்வி சதீஷ்குமாா், அஸ்வினி தேசிங்கு ராஜா, கவுன்சிலா் ஆனந்தன், வட்ட வழங்கல் அலுவலா் தமிழ்ச்செல்வி மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ஆம்பூரில் எருது விடும் திருவிழா

ஆம்பூா் சான்றோா்குப்பம் பகுதியில் எருதுவிடும் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் கொடியசைத்து திருவிழாவை தொடங்கி வைத்தாா். வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் அஜிதா பேகம், ... மேலும் பார்க்க

சாலை தடுப்பில் டேங்கா் லாரி மோதி பெருக்கெடுத்து ஓடிய டீசல்

வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிலைதடுமாறி ஓடிய டேங்கா் லாரி தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆயிரக்கணக்கான லிட்டா் டீசல் சாலையில் வீணாக ஓடியது. பெங்களூரிலிருந்து சென்னைக்கு சென்ற ட... மேலும் பார்க்க

சிமென்ட் சாலை அமைக்கும் பணி

உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.7.70 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை பேரூராட்சித் தலைவா் பூசாராணி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா். வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் வாா்டு எண் 7, ... மேலும் பார்க்க

எம்கேஜேசி மாணவிகள் சாதனை

திருவள்ளுவா் பல்கலைகழக மண்டல அளவிலான பூப்பந்து போட்டிகள் மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றன. இப்போட்டில் பல்வேறு கல்லூரி அணிகள் பங்கேற்று விளையாடின. இறுதி ஆட்டத்தில் ... மேலும் பார்க்க

சோலூரில் தாா் சாலைப் பணி தொடக்கம்

மாதனூா் ஒன்றியம், சோலூா் ஊராட்சியில் தாா் சாலை அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.90 லட்சத்தில் தாா் சாலை அமைக்கும் பணியை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் பூஜையிட்ட... மேலும் பார்க்க

நாகநாத சுவாமி கோயிலில் சண்முகக் கவச பாராயணம்

ஆம்பூா் சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில், 99-ஆவது மாத சண்முகக் கவசம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு, மூலவா் நாகநாதா், வள்ளி தெய்வ... மேலும் பார்க்க