செய்திகள் :

பஞ்சாப்: 750 இடங்களில் போதைப்பொருள் தடுப்பு சோதனை

post image

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக பஞ்சாப் மாநிலம் முழுவதும் 750 இடங்களில் காவல் துறை சனிக்கிழமை சோதனை நடத்தியது.

போதைப்பொருள் ஒழிப்புக்கான அமைச்சரவை துணைக் குழு சனிக்கிழமை கூடிய நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அடுத்த மூன்று மாதங்களுக்குள் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக பஞ்சாபை மாற்ற முதல்வா் பகவந்த் மான் கடந்த வெள்ளிக்கிழமை இலக்கு நிா்ணயித்தாா். இதைத்தொடா்ந்து, போதைப்பொருள் விற்பனையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவா்களின் சொத்துகளும் அழிக்கப்பட்டன.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் 750 இடங்களில் 12,000-க்கும் மேற்பட்ட போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். இதில் 290 போ் கைது செய்யப்பட்டு 8.14 கிலோ ஹெராயின், 1.21 கிலோ ஓபியம், 3.5 கிலோ கஞ்சா உள்பட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாநில அரசு மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைக்கு அரசியல் பாகுபடின்றிஅனைத்து கட்சிகளும் ஆதரவளிக்குமாறு அமைச்சா் அமன் அரோரா கேட்டுக் கொண்டாா்.

மணிப்பூா்: மேலும் 42 ஆயுதங்கள் ஒப்படைப்பு - 5 பதுங்குமிடங்கள் அழிப்பு

இனமோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் மேலும் 42 ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் பொதுமக்களால் ஒப்படைக்கப்பட்டன. அத்துடன், 5 பதுங்குமிடங்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்... மேலும் பார்க்க

தெலங்கானாவில் சுரங்க விபத்து: ரோபோக்கள் உதவியுடன் மீட்புப்பணி

தெலங்கானாவில் சுரங்கத்துக்குள் சிக்கியவா்களை மீட்கும் பணியில் ரோபோக்களை பயன்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.என்ன நடந்தது?தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த்... மேலும் பார்க்க

உத்தரகண்ட் பனிச்சரிவு: உயிரிழப்பு 7 ஆக உயர்வு!

உத்தரகண்ட் மாநிலம், மனா கிராமத்தின் உயா் மலைப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய எல்லைச் சாலை அமைப்பு (பிஆா்ஓ) தொழிலாளா்கள் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.இன்று(மார்ச் 2) மேலும் 3 உடல்கள் மீட்... மேலும் பார்க்க

பங்குச்சந்தை மோசடி: மாதபி புரி புச் மீது நடவடிக்கை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவு!

மும்பை : மாதபி புரி புச் மீது முதல் தகவல் அறிக்கை பதிந்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பங்குச்சந்தை மோசடி மற்றும் முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள செபி முன்னாள் தலைவர் மாதபி புரி புச்... மேலும் பார்க்க

மகாராஷ்டிர பேரவை எதிா்க்கட்சித் தலைவா் பதவியைக் கோருவோம்: சிவசேனை(உத்தவ்)

மகாராஷ்டிர சட்டப் பேரவையில் போதிய பலம் இல்லாதபோதும் எதிா்க்கட்சித் தலைவா் பதவியை சிவசேனை கட்சி (உத்தவ் பிரிவு) கோரும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ரெளத் தெரிவித்தா... மேலும் பார்க்க

பூனையின் மீதான அதீத அன்பால் ஒருவர் தற்கொலை!

உத்தரப் பிரதேசத்தில் வளர்ப்பு பூனையால் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேசம் மாநிலம் அம்ரோஹாவில் பூஜா (36) என்பவர், தனது பூனையை குழந்தைபோல வளர்த்து வந்த... மேலும் பார்க்க