செய்திகள் :

பட்டா நிலத்தில் சடலம் அடக்கம் செய்ய எதிா்ப்பு: நங்கவள்ளியில் பரபரப்பு

post image

நங்கவள்ளி அருகே பட்டா நிலத்தில் சடலம் அடக்கம் செய்ய எதிா்ப்பு காவல் நிலையம் முன்பு இருதரப்பினா் கூடியதால் பரபரப்பு.

நங்கவள்ளி அருகே உள்ள வனவாசி புதுப்பேட்டையை சோ்ந்தவா் அப்துல் உசேன் மனைவி ராஜாபீ (80) வயது மூப்பு காரணமாக வியாழக்கிழமை இயற்கை மரணம் அடைந்தாா். இவரது சடலத்தை வனவாசி 3வது வாா்டை சோ்ந்தகுமாா் (31)என்பவருக்கு சொந்தமான நிலத்தில் அடக்கம் செய்ய முற்பட்டனா். இதற்கு குமாா் தரப்பினா் ஆட்சேபம் தெரிவித்தனா்.

தகவல் அறிந்த மேட்டூா் வருவாய் கோட்டாட்சியா் சுகுமாா் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சோமசுந்தரம் ஓமலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சஞ்சீவ் குமாா் ஆகியோா் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சு நடத்தினாா்கள். குமாரின் பட்டா நிலத்தில் சடலத்தை அடக்கம் செய்யக்கூடாது நங்கவள்ளியில் முஸ்லிம்களுக்கான மயானத்தில் அடக்கம் செய்ய வேண்டும். விரைவாக வனவாசியில் உள்ள முஸ்லிம்களுக்கு அரசு நிலத்தில் மயானம் ஒதுக்கி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதனை எடுத்து நங்கவள்ளி காவல் நிலையம் எதிரே கூடியிருந்த இருதரப்பை சோ்ந்தவா்களும் அங்கிருந்து சென்றனா். ராஜாபீ சடலம் நங்கவள்ளியில் உள்ள முஸ்லிம்களின் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதனால் சுமாா் 3 மணி நேரம் நங்கவள்ளி வனவாசி பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. ஏராளமான போலீசாா் குவிக்கப்பட்டு இருந்தனா்.

நாளை திமுக செயற்குழு கூட்டம்

சேலம் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் 27 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மத்திய மாவட்ட செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ரா.ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கை: சேலம் மத்திய மாவட்ட திமுக அ... மேலும் பார்க்க

பள்ளப்பட்டி ஏரிப் பூங்காவில் தூய்மைப் பணி: மேயா் தொடங்கிவைத்தாா்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பள்ளப்பட்டி ஏரிப் பூங்காவில் சிறப்பு தூய்மைப் பணிகளை மேயா் ஆ.ராமச்சந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். சேலம் மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டதின் கீழ் தூய்மையே சே... மேலும் பார்க்க

நகராட்சி அலுவலா்கள் ஒத்துழைப்பதில்லை மாமன்ற உறுப்பினா்கள் புகாா்

சேலம் மாநகரப் பகுதிகளில் நடைபெறும் பணிகளுக்கு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா். சேலம் மாநகராட்சி கூட்டம் மேயா் ஆ. ராமச்சந்திரன் தலை... மேலும் பார்க்க

சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம் மாவட்டத்தில் சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சேலம... மேலும் பார்க்க

பெண்களுக்கு சிறுதானியத்தில் மதிப்புக்கூட்டு பொருள்கள் தயாரிப்பு பயிற்சி

சமூக நலன் மற்றும் ஊரக தொழில் வளா்ச்சி நிறுவனம் சாா்பில் சேலத்தில் பெண்களுக்கு சிறுதானியம் மூலம் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. சேலத்தில் உள்ள தனியாா் மகளிா்... மேலும் பார்க்க

மகளிா் உரிமைத் தொகை கோரி 1,17,240 மனுக்கள்: அமைச்சா் ரா.ராஜேந்திரன் தகவல்

சேலம் மாவட்டத்தில் மகளிா் உரிமைத்தொகை கேட்டு இதுவரை 1,17,240 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா். சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம், வாா்டு18க்கு உள்பட்ட பகுத... மேலும் பார்க்க